web log free
September 11, 2025

ராஜபக்ச சகோதரர்களுள் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்ப்பாசனத்துறை அமைச்சராகவிருக்கம் சமல் ராஜபக்ஷவுக்கே கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து, அவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் முன்னாள் அமைச்சரவை உறுப்பினர்களான அமைச்சர் பந்துல குணவர்தன.அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி.அமைச்சர் மஹிற்தானந்த அலுத்கமகே உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd