web log free
May 17, 2024

இன்று கொழும்பில் 21 கம்பஹாவில் 26 களுத்துறையில் 24 குருநாகலில் 9 புத்தளத்தில் 2 நுவரெலியாவில் 7 மாத்தளையில் 1 பதுளையில் 14 மொனராகலவில் 12 காலியில் 4 மாத்தறையில் 9 ஹம்பந்தொடவில் 12 ரத்தினபுரியில் 3 கேகாலவில் 5 அநுராதபுரத்தில் 8 யாழ்பாணத்தில் 40 கிளிநொச்சியில் 4 முல்லைதீவில் 3 மன்னாரில் 3 வவுனியாவில் 12 திருகோணமலையில் 16 மட்டக்களப்பில் 31 மற்றும் அம்பாறையில் 27 என நாடு முழுவதும் 297 தடுப்பூசி மையங்கள் செயற்பட்டவண்ணம் இருப்பதாக சுகாதார வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் மொத்தமாக 147114 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தகவல் வழங்கியுள்ளது. 

இந்நிலையில் மொடோனா தடுப்பூசியின் 1வது டோஸ் 30 பேருக்கும் 2வது டோஸ் 1815 பேருக்கும் வழங்கப்பட்ட நிலையில் சைனபார்ம் தடுப்பூசியின் 1வது டோஸ் 51798 பேருக்கும் 2வது டோஸ் 88700 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அதே போல் அஸ்ட்ரசெனிகா தடுப்பூசியின் 1வது டோஸ் 3194 பேருக்கும் 2வது டோஸ் 839 பேருக்கும் பைசர் தடுப்பூசியின் 1வது டோஸ் 353 பேருக்கும் 2வது டோஸ் 385 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A-9 வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம்-கண்டி சாலையில் வவுனியாவில் இருந்து மாங்குளம் நோக்கி சென்ற வண்டி மாங்குளத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பர் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.

வண்டியின் சாரதியும் மற்றுமொருவரும் மருத்துவமனையில் இறந்துள்ளனர், டிப்பரில் இருந்த இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்த விபத்தில் வண்டி கடுமையாக சேதமடைந்ததுடன், விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

#வவுனியா #கனகராயன்குளம் #பொலிஸ் #A9வீதி #வாகனவிபத்து