ஜனாதிபதித் தேர்தலுக்கு முகங்கொடுக்க அரசாங்கமும் தமது கட்சியும் தயாராக இருப்பதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தியுள்ளார்.
அதற்கு அரசாங்கத்தின் அனைத்து தரப்பினரும் தயாராக இருப்பதாகவும், அதன்படி நாட்டுக்காக உழைத்த நாட்டிற்காக உழைக்கக் கூடிய ஒரு பொது வேட்பாளர் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் முன்வைக்கப்படுவார் என்றும் அவர் நிச்சயமாக அடுத்த ஜனாதிபதியாக வருவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிலாபம் பிரதேசத்தில் 18 வயதுடைய பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தம்புள்ளை விசேட பணியக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மாத்தளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
21 மற்றும் 40 வயதுடைய சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக ஹலவத்த தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று (22) சிலாபம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து தம்மை நீக்கும் பிரேரணை மீதான விவாதத்தை காண தனக்கும் தனது இரண்டு பிள்ளைகளுக்கும் சந்தர்ப்பம் வழங்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற பொதுச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை நீக்கும் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ளது.
பௌத்த, இந்து, இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்தவர்கள் தனது கருத்தினால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று பாதிரியார் ஜெரோம் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை திரும்பவும் தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீடியோ தொழிநுட்பத்தின் ஊடாக மிரிஹானவில் இடம்பெற்ற மத சேவையில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தினால் சில ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குரல் இழந்துள்ளதாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கை ராஜபக்சவின் பொருளாதாரக் கொள்கையல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக சமகி ஜன பலவேகய பாரிய கொள்கைப் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளதாக சுட்டிக்காட்டிய பாடலி சம்பிக்க ரணவக்க, ஹர்ஷ டி சில்வா, கபீர் ஹாசிம், இரான் விக்கிரமரத்ன போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தந்தைவழி பரம்பரைச் சொத்தை வைத்து அரசியல் செய்யும் இளவரசர்கள் மற்றும் மனைவியை வைத்து அரசியல் செய்ய முடியாது எனவும், அவரும் ஒரு குழுவினரும் இணைந்து அதனை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ரணவக்க இணையச் சேவையொன்றுக்கு வழங்கிய விசேட உரையாடலில் குறிப்பிட்டுள்ளார். நாட்டை கட்டியெழுப்ப புதிய அரசியல் கட்சி தொடங்கி உள்ளதாகவும் கூறுகிறார்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் புதிய ஏற்பாட்டாளராக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இணை சுகாதார பீடத்தைச் சேர்ந்த மதுஷன் சந்திரஜித் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தனது கையொப்பத்துடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற அமர்வின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே மிகக் குறைந்தளவு புவியீர்ப்பு விசை கொண்ட வலயமாக இலங்கையின் தெற்கு பகுதியை நாசா அறிவித்துள்ளது.
புவியீர்ப்பு விசையின் வேறுபாடுகள் தொடர்பில் நாசா நிறுவனத்தினால் பல வருடங்களாக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
உலகின் அனைத்து பாகங்களிலும் புவியீர்ப்பு விசை ஒரே அளவாக இருக்காதென்பதை நாசா கணித்துள்ளது.
உலகின் பல்வேறு பகுதிகளில் புவியீர்ப்பு விசையில் உள்ள வேறுபாடுகளை ஆய்வு செய்து, செயற்கைக்கோள் தரவுகள் மூலம் நீரின் அடர்த்தியை கணக்கிட்டு நாசாவினால் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
உலகின் மிகக் குறைந்த ஈர்ப்பு விசை கொண்ட இடங்களாக இலங்கையின் தெற்கு, மாலைதீவின் கிழக்கே இந்திய பெருங்கடல் மற்றும் ஹட்சன் விரிகுடாவிற்கு அருகில் உள்ள கனடாவின் வட பகுதி என்பவற்றை நாசா அறிவித்துள்ளது.
நாசாவின் கண்டுபிடிப்புகளுக்கு அமைவாக, பூமியின் மேற்பரப்பின் அடர்த்தியும் எரிமலையின் அடர்த்தியும் இந்த வேறுபாட்டிற்குக் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
உலகில் அதிக ஈர்ப்பு விசை உள்ள இடங்களில் பொலிவியா, வடக்கு அண்டீஸ் மலைகள் பெயரிடப்பட்டுள்ளன.
எரிமலைக் குழம்புகளின் செறிவு மற்றும் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்து இந்த ஈர்ப்பு விசை மாற்றமடையும் எனவும் நாசா சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை கிரிக்கெட்டின் (SLC) தற்போதைய தலைவர் ஷம்மி சில்வா, இன்று நடைபெற்ற SLC வருடாந்த பொதுக் கூட்டத்தில், 2025 ஆம் ஆண்டு வரை மூன்றாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் போட்டியின்றி இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பொரளை லெஸ்லி ரணகல மாவத்தை புகையிரத கடவைக்கு அருகில் 53 வயதுடைய நபர் ஒருவர் இனந்தெரியாத இருவரினால் இன்று காலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த போது, மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான களனியைச் சேர்ந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை, தலைமறைவாகியுள்ள சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டு செல்லும் பணி துரிதப்படுத்தப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டு செல்லும் பணியை துரிதப்படுத்துவது தொடர்பிலான அறிக்கையொன்றை ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்குமாறு துறைசார் இராஜாங்க அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
டிஜிட்டல் மற்றும் பசுமை பொருளாதாரம் ஆகியவற்றை ஒன்றாக மேம்படுத்துவதற்கு இளைஞர்களின் பரிந்துரைகளை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.