இன்று (12) மின் தடை ஏற்படாது என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள மின்சார தேவையை நிர்வகிக்க முடிந்ததால், தொடர்புடைய முடிவு எடுக்கப்பட்டதாக வாரியம் தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீர் மின் தடையைத் தொடர்ந்து, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று ஜெனரேட்டர்களும் செயலிழந்தன.
மின்சாரத் தேவையை நிர்வகிப்பதற்காக நேற்றும் நேற்று முன்தினம்ம் அனைத்துப் பகுதிகளுக்கும் ஒன்றரை மணி நேரம் மின்சாரம் துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 4 பிரிவுகளாக தீவு முழுவதும் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு மேற்கொள்ளப்பட்டது.
புகழ்பெற்ற மெக் கரி வாசனைத்திரவிய வர்த்தகநாமத்திற்குபின்னிருக்கும் கம்பெனியான, லங்கா ஸ்பைஸ் (Pvt.) லிமிட்டெட்டானது 'செனஹச டாத்" துவக்கத்தின் ஊடாகசமுதாய முன்னேற்றத்திற்கான தன்னுடையஅர்ப்பணிப்பினைத் தொடருகின்றது. இம்முறை, அதன்மூன்றாவது துவக்கத்தில் கொட்டாவை, பன்னிபிட்டியவிலுள்ளமே/ஜா வித்தியாதன மஹா வித்தியாலயத்திலானகவனம்செலுத்தப்பட்டதுடன் அங்கு நூலகத்திற்கானநூல்களும் நூலக மேசைகளும் வழங்கிவைக்கப்பட்டன.
'செனஹச டாத்" துவக்கமானது, கல்விக்கான சமமானஅணுகலை மேம்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு, மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடனான பாடசாலைகளுக்குஆதரவளிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டவொன்றாகும். இத்திறப்பாட்டின் தொடர்ச்சியாக, மே/ஜா வித்தியாதன மஹாவித்தியாலயமானது நன்மை பெறும் பாடசாலையாகத்தெரிவுசெய்யப்பட்டிருந்தது. லங்கா ஸ்பைஸ் (Pvt.) லிமிட்டெட்டின் பதில் பிரதம சந்தைப்படுத்தல்உத்தியோகத்தர், வருண கருணாரத்ன, அவர்கள்கருத்துதெரிவிக்கையில், 'வாசிப்பானது அறிவினைவளப்படுத்துவது மாத்திரமின்றி மேலும் நிறைவான வாழ்வைவாழவும் சமூகத்திற்கு நேர்க்கணியமாக பங்களிக்கவும்தனிநபர்களை வலுவூட்டுவதுமான உண்மையில்பெறுமதிமிக்கவொரு பழக்கமாகும். ஒரு சமூக பொறுப்புமிக்கநிறுவனமாக, லங்கா ஸ்பைஸ் (Pvt.) லிமிட்டெட்டாகிய நாம்எதிர்கால சந்ததியினரை வடிவமைப்பதிலான கல்வியின்பெறுமதியினை புரிந்துக்கொண்டுள்ளளோம்.' என்றார்.
வித்யாதன மஹா வித்தியாலயத்தின் அதிபர், கே.எம்.எஸ். சந்தன அவர்கள் தன்னுடைய நன்றியைத் தெரிவிக்கையில்,'லங்கா ஸ்பைஸ் (Pvt.) லிமிட்டெட்டிடமிருந்தான இந்த ஆதரவுஎமது மாணவர்களிற்கானவொரு அரிய வாய்ப்பாகும். இதுஅவர்கள் பெறும் கல்வியின் தரத்தினை குறிப்பிடத்தக்களவில்அதிகரிக்கும் என்பதுடன், முன்னர் அடிப்படை வளங்களிற்குதேக்கமுற்றிருந்த சூழலில் வெற்றிபெறவும் அவர்களைஅனுமதிக்கும்.'
கம்பெனியின் நீண்டகால தூரநோக்குகளை பற்றிக்கூறுகையில், கருணாரத்ன அவர்கள், 'எம்முடையஅர்ப்பணிப்புக்களின் தொடர்ச்சியாக, இலங்கையின்பாடசாலை மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்கானஆதரவினை நாம் தொடருவோம். எம்முடைய 'செனஹச டாத்" துவக்கத்தின் ஊடாக, சமூக நலவாழ்வு மற்றும் சமுதாயநல்லிருப்புக்களினை நோக்கியதாக எம்முடைய முயற்சிகளைவிஸ்தரிக்க நாம் நோக்கங்கொண்டுள்ளோம். வாசிப்பதற்கும்கற்பதற்குமான விருப்பத்தினை வளர்ப்பதனால், மேலும்அறிவூட்டப்பெற்றதும் பொறுப்புமிக்கதுமான சமூகத்தைகட்டமைப்பதற்கு பங்களிக்க நாம் நம்பிக்கைக்கொண்டுள்ளோம்.' என்றார்.
லங்கா ஸ்பைஸானது நிலைபேண் கல்வி அபிவிருத்திகளின்மீது கவனம்செலுத்தும் முற்போக்கு சிந்தனைக்கொண்டசெயற்றிட்டங்களின் தொடரொன்றுடன் 'செனஹச டாத்" துவக்கத்தினை விரிவுபடுத்த தயாரகவுள்ளது. கைத்தொழிற்றுறை அறிவு மற்றும் அடிப்படை வாழ்க்கைமற்றும் தொழிற்றிறன்களை கட்டமைக்க மாணவர்களிற்குஉதவுவதற்காக பாடசாலைகளின் பங்காண்மையுடன், வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டங்களை அறிமுகப்படுத்தவும்கம்பெனி திட்டமிட்டுள்ளது.
1984 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட, லங்கா ஸ்பைஸானது,இலங்கையில் உயர் தரத்திலான வாசனைத்திரவியங்கள்மற்றும் மூலிகைகளிற்கான மறுபெயராக, அதனுடைய மெக்கரி வர்த்தகநாமத்தின் ஊடாக வாசனைத்திரவிய துறையில்தொடர்ந்தும் முன்னணிவகிக்கின்றது. 'செனஹஸ டாத்" துவக்கத்துடன், கல்வித் துறையிலும் இலங்கைஇளைஞர்களின் எதிர்காலத்திலும் நீடித்த தாக்கமொன்றைஏற்படுத்த கம்பெனி அர்ப்பணிப்புடன் காணப்படுகின்றது.
நிலைபேறான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான தனதுபயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில்SDB வங்கியானது, Institute for Rural Sustainable Development (IRSD) (கிராமிய நிலைபேறான அபிவிருத்திநிறுவனத்துடன்) ஒரு மூலோபாய கூட்டாண்மையைஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. கிராமிய சமூகங்களைஇலக்காகக் கொண்ட நிலைபேறான தன்மைமுயற்சிகளுக்கான ஆலோசனை மற்றும் ஆதரவைவழங்குவதில் முன்னணியில் உள்ள IRSD, நிலைபேறானதன்மைக்கான விரிவான மற்றும் சிறந்த தாக்கத்தைஏற்படுத்தும் அணுகுமுறை மூலம் கிராமிய இலங்கையைமாற்றமடையச் செய்ய SDB வங்கியுடன் இணைந்து செயற்படமுன்வந்துள்ளது.
இந்தக் கூட்டாண்மை மூலம், கிராமிய சமூகங்களைமேம்படுத்துவதற்கும் உள்ளீர்க்கப்பட்ட பொருளாதாரவளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் தமது பகிரப்பட்டஅர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் ஒரு விரிவான உத்தியை SDB வங்கியும் IRSD யும் செயற்படுத்தும். இந்த முயற்சி கூட்டுறவுமற்றும் நுண், சிறிய, நடுத்தர, தொழில்முயற்சியாளர்கள்(MSME) துறைகள், சமூக அடிப்படையிலான சுற்றுலா, பெண்களை வலுவூட்டல் உள்ளிட்ட முக்கிய அபிவிருத்திபிரிவுகளை உள்ளடக்குகின்றது.
SDB வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் அதன்நிறைவேற்றுப் பணிப்பாளருமான, கபில ஆரியரத்ன "SDB வங்கியின் கிராமிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கிராமியசமூகங்களின் தனித்துவமான தேவைகளை நிவர்த்தி செய்து, அதன் மூலம் நிலைபேறான வளர்ச்சியை ஆதரிப்பதன் மூலம், நிலைபேறான வளர்ச்சியை ஆதரிக்கின்ற வங்கியின் பரந்ததூரநோக்குடன் இந்தக் கூட்டாண்மை முழுமையாகஒத்துப்போகிறது. IRSD உடனான ஒத்துழைப்பானது எமதுநிபுணத்துவ அறிவை வலுப்படுத்துவதோடு, இந்தசமூகங்களின் பயன்படுத்தப்படாத மனிதவள, சமூக, பொருளாதார திறனை உணர்வதற்கான எமது பணிநோக்கிற்காக எமக்கு உதவுகிறது. இணைந்து செயற்படுவதன்மூலம், கிராமிய பொருளாதாரங்களை மாற்றியமைப்பதையும், சக இலங்கையர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதையும்நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம்" என்றார்.
இந்த திட்டத்தின் கீழ், கூட்டுறவுத் துறையைவலுப்படுத்துவதிலும், கிராமிய சமூகங்களின் சமூக, பொருளாதார மற்றும் மனித மேம்பாட்டுத் தேவைகளைநிவர்த்தி செய்வதன் மூலம் அவர்களை மேம்படுத்துவதிலும்SDB வங்கி முக்கிய பங்கு வகிக்கும். மக்களை மையமாகக்கொண்ட அணுகுமுறையைக் கருத்தில் கொண்ட, கூட்டுறவுத்துறையானது கிராமிய முன்னேற்றத்தின் முக்கியஇயக்கிகளாகச் செயற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, MSME துறை அபிவிருத்தி தொடர்பான இந்ததிட்டத்தின் கவனமானது வேலைவாய்ப்பு உருவாக்கத்தைத்தூண்டுவதோடு, பொருளாதார வளர்ச்சியைத் தூண்டி, மீள்தன்மையை மேம்படுத்தும். நுண், சிறு, நடுத்தரநிறுவனங்களை ஆதரிப்பதன் மூலம், நிலைபேறான கிராமியவளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்தை நிறுவுவதைஇக்கூட்டாண்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சமூக அடிப்படையிலான சுற்றுலாவில் நிபுணத்துவம் பெற்றIRSD ஆனது, இந்த அறிவைக் கொண்டு, இலக்குவைக்கப்பட்ட பிராந்தியங்களின் தனித்துவமான கலாசாரரீதியான மற்றும் இயற்கை சார்ந்த வளங்களைப் பயன்படுத்தும். இந்த அணுகுமுறையானது, உள்ளூர் சமூகங்கள் தங்களதுபாரம்பரியத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க உதவுகின்றஅதே வேளையில் புதிய வருமான வாய்ப்புகளையும்உருவாக்கும். அது மாத்திரமன்றி இந்த கூட்டாண்மை மூலம், பசுமை விவசாயம், தொழில்முனைவு மற்றும் வணிகமுகாமைத்துவத்தில் பெண்களின் பங்களிப்பைஊக்குவிப்பதன் மூலம் பெண்களை வலுவூட்டுவதற்கான அதன்உறுதிப்பாட்டை SDB வங்கி மேலும் அதிகரிக்கும். நிலைபேறான மற்றும் உள்ளீர்க்கப்ட்ட கிராமியஅபிவிருத்தியை முன்னெடுப்பதில் பெண்கள் கொண்டுள்ளமுக்கிய பங்களிப்பை இந்த முக்கியத்துவம் எடுத்துக்காட்டுகிறது.
SDB வங்கி அதன் தொடக்கத்திலிருந்தே, அடித்தளமட்டத்தில் நீண்டகால வளர்ச்சி மற்றும் செழிப்பைவளர்ப்பதற்காக கொண்டுள்ள அதன் அர்ப்பணிப்பு காரணமாக, மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெற்றுள்ளது. தனதுஎல்லைகளை விரிவுபடுத்துவதற்காக தொடர்ச்சியாகபுத்தாக்கம் மிக்க விடயங்களை உருவாக்கி வரும் இவ்வங்கி, கிராமிய வளர்ச்சிக்கான ஒரு ஊக்கியாக அதன் பங்கைஉறுதிப்படுத்தி வருகின்றது. IRSD போன்ற புகழ்பெற்றநிறுவனங்களுடன் கூட்டாண்மைகளை உருவாக்குவதன்மூலம், கிராமிய சமூகங்களின் வாழ்க்கையில் உறுதியானமாற்றத்தை ஏற்படுத்தும் அதன் நோக்கத்தை SDB வங்கிமீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த ஒத்துழைப்பானது, மாற்றத்தை உறுதியளிப்பதோடு மட்டுமல்லாமல், நிலைபேறானவளர்ச்சியில் எதிர்கால முயற்சிகளுக்கான ஒருஅளவுகோலையும் அமைக்கிறது.
SDB வங்கி பற்றி:
ஒவ்வொரு தனிநபரின் தேவைகளுக்கும் ஏற்பவாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட, விரிவானஆதரவை வழங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்டஎதிர்காலத்துடன் இணைந்து பயணிக்க தயாராக உள்ள SDB வங்கியானது கொழும்பு பங்குச் சந்தையின் பிரதானசபையில் பட்டியலிடப்பட்டுள்ளதும் BB+(lka) பிட்ச்மதிப்பீட்டைக் கொண்ட இலங்கை மத்திய வங்கியால்ஒழுங்குபடுத்தப்பட்ட அனுமதிப்பத்திரம் பெற்ற விசேடவங்கியாகும்.
நாடளாவிய ரீதியில் உள்ள 94 கிளைவலையமைப்பின் ஊடாக நாடு முழுவதும் உள்ள அதன்சில்லறை வணிக சிறிய நடுத்தர தொழில்முயற்சியாளர்கள்கூட்டுறவு மற்றும் வணிக வங்கி வாடிக்கையாளர்களுக்குவிரிவான நிதிச் சேவைகளை SDB வங்கி வழங்குகிறது.
SDB வங்கியின் நெறிமுறைகளில் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும்ஆளுகை ஆகிய ESG கொள்கைகள் ஆழமாகப்பதிந்துள்ளதோடு நிலைபேறான நடைமுறைகள் மூலம்உள்ளூர் சமூகங்கள் மற்றும் வணிகங்களை மேம்படுத்துவதில்உறுதியான கவனத்தை அது செலுத்துகிறது. பெண்களைவலுவூட்டல் மற்றும் டிஜிட்டல் உள்ளீர்ப்பை ஊக்குவிப்பதில்முக்கியமான அர்ப்பணிப்பையும் வங்கி கொண்டுள்ளது.
SDB வங்கி மற்றும் IRSD இடையேயான புரிந்துணர்வுஒப்பந்தம் பரிமாறிக்கொள்ளப்பட்ட போது... (இடமிருந்து - வலமாக) SDB வங்கியின் பிரதிப் பொது முகாமையாளரும்அதன் பிரதம நிதி அதிகாரியுமான சங்க அபேவர்தன, SDB வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், அதன் பிரதமநிறைவேற்று அதிகாரியுமான கபில ஆரியரத்ன, IRSD தலைவரும் அதன் பணிப்பாளருமான ஷிராணி வீரகோன், SDB வங்கியின் கிராமிய மேம்பாட்டு முகாமையாளர் சுமேதாகுமாராரச்சி.
The document is Classified as Confidential - Internal by User
இன்றும் (11) நாடு முழுவதும் 90 நிமிட மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 10 மணி வரை 4 பிரிவுகளின் கீழ் இந்த மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மேலும், பாவனையாளர் கணக்கு எண்ணை 1987 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி ஊடாக அனுப்புவதன் மூலமும் மின்வெட்டு நேரங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், நேற்று, நாடு முழுவதும் 90 நிமிட மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டது.
இதேவேளை, நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தை அடுத்த வெள்ளிக்கிழமைக்குள் தேசிய மின் கட்டமைப்புடன் சேர்க்க எதிர்ப்பார்த்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதன் ஊடகப் பேச்சாளரும், களனிதிஸ்ஸ இணைந்த சுழற்சி மின் நிலையத்தின் தலைமை பொறியியலாளருமான தம்மிக்க விமலரத்ன தெரிவித்தார்.
இருப்பினும், குறித்த மின் உற்பத்தி நிலையம் தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்படும் வரை மின்சார விநியோகத்தில் இடையூறுகள் ஏற்படக்கூடும் என்று தம்மிக்க விமலரத்ன தெரிவித்தார்.
மின்வெட்டு ஏற்படும் நேரங்கள் மற்றும் பகுதிகள் தொடர்பான தகவல்கள் கீழே .
தற்போதைய அரசாங்கத்திற்கும் விலங்குகளுக்கும் இடையில் சில சிக்கல்கள் இருப்பதாகவும், விலங்குகள் அரசாங்கத்தை நடத்த அனுமதிக்காது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கூறுகிறார்.
"இந்த விலங்குகளை அரசாங்கம் எதுவும் செய்ய விடாது." விலங்குகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே சில பிரச்சனைகள் உள்ளன. இது ஒரு பழைய வாதம் என்று நான் நினைக்கிறேன். நேற்று, மின்சார அமைச்சர், ஒரு குரங்கு தப்பிச் சென்றதால்தான் நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டதாகக் கூறினார். "இது ஒரு பெரிய வேலை."
உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்மானத்தை சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கும் நோக்கில் 2025 பெப்ரவரி 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை 9.30 மணிக்கு விசேடமாகப் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களின் தலைமையில் இன்று (10) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதற்கமைய பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 16 இன் ஏற்பாடுகளுக்கு அமைய கௌரவ பிரதமரினால் கௌரவ சபாநாயகரிடம் விடுக்கப்படும் கோரிக்கைக்கு அமையப் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அழைப்பு விடுக்கப்படுகின்றது. அத்துடன், பெப்ரவரி 14ஆம் திகதி இந்தச் சட்டமூலத்தை ஆராய்வதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுசார் ஆலோசனைக் குழுவைக் கூட்டுவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேர்தல்களை விரைவில் நடத்துமாறு உயர்நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும் பின்னணியில், இதற்கு மதிப்பளிக்கும் வகையில் தேர்தலை மேலும் காலதாமதப்படுத்தாது நடத்துவதன் அவசியத்தை கௌரவ சபை முதல்வர், அமைச்சர் பிமல் ரத்னாயக்க இங்கு சுட்டிக்காட்டினார்.
இதன்படி, உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தை எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை பி.ப 2.00 மணி முதல் பி.ப 7.00 மணிவரை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
குறித்த சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் திருத்தங்களை முன்வைப்பதாயின் அவற்றை பெப்ரவரி 17ஆம் திகதி மு.ப 10.00 மணிக்கு முன்னர் வழங்குவதற்கும் இங்கு இணங்கப்பட்டது.
அதேநேரம், நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அவர்களினால் 2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு (வரவுசெலவுத்திட்ட உரை) முன்னர் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய பெப்ரவரி 17ஆம் திகதி திங்கட்கிழமை மு.ப 10.30 மணிக்கு முன்வைக்கப்படும் என்றும் பதில் செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
நாட்டை 4 வலயங்களாக பிரித்து இன்றும்(10) நாளையும்(11) மின்வெட்டை அமுல்படுத்தி மின்சாரத்திற்கான கேள்வியை முகாமைத்துவம் செய்ய இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.
நேற்று(09) ஏற்பட்ட திடீர் மின்தடை காரணமாக நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்தின் 3 மின்பிறப்பாக்கிகளும் செயலிழந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய பிற்பகல் 3.30 முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு வலயத்திலும் ஒரு மணித்தியாலமும் 30 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இலங்கை முழுவதும் திடீரென மின் தடை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இது இலங்கை முழுவதும் பல பகுதிகளை பாதித்துள்ளது.
இலங்கை மின்சார சபை (CEB) இந்த பிரச்சினையை ஒப்புக்கொண்டு, விரைவில் மின் விநியோகத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ளது.
இந்த இடையூறுக்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. மறுசீரமைப்பு முயற்சிகள் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் பொறுமையாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொள்கிறார்கள்.
இந்த நேரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் கூட்டணிகள் பற்றி பேசுவது ஒரு பொறி என்று முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா கூறுகிறார்.
தேர்தல் வரை கூட்டணி கட்டுவதை ஒத்திவைக்க வேண்டும் என்றும், இந்த நேரத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இது செய்யப்படாவிட்டால், இந்த அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் விரக்தியைத் திசைதிருப்ப இடமில்லை என்றும் அவர் கூறுகிறார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, மக்கள் விரும்புவதைப் பற்றி தனது முகாம் பேசவில்லை என்றும், தற்போதைய ஜனாதிபதி அனுர திசாநாயக்க மக்கள் பிரச்சினைகள் குறித்துப் பேசினார் என்றும் டிலான் பெரேரா கூறுகிறார்.
அவரது இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையில் தற்போது பரிசோதிக்கப்பட்டு வருவது சோசலிச பொருளாதார முறை அல்ல, மாறாக ஒரு பாசாங்குத்தனமான பொருளாதார முறை என்று முன்னாள் அமைச்சர் திலும் அமுனுகம கூறுகிறார்.
நாட்டிற்கு தொடர்ந்து பொய் சொன்னதால், மக்கள் மட்டுமல்ல, பொய்யர்களும் இறுதியில் அந்தப் பொய்களை உண்மையாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கினர் என்று அவர் கூறினார்.
அந்தப் பொய்களால் வெற்றி பெற்ற அரசாங்கம், இப்போது வெற்றி பெற்ற பிறகும், பொய்களால் நாட்டை முன்னோக்கி நகர்த்த முயற்சிக்கிறது என்றும் திலும் அமுனுகம கூறுகிறார்.
இந்த முறை முன்னர் ஜெர்மனியில் முயற்சிக்கப்பட்டது, ஆனால் அது வெற்றிபெறவில்லை என்றும், இலங்கையில் இது வெற்றிபெற வாய்ப்பில்லை என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
பொலன்னறுவையில் சர்வஜன பலவேகய கட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.