பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள ‘எல் நினோ’ காலநிலை மாற்றம் படிப்படியாக வலுப்பெற்று வருவதாக சர்வதேச காலநிலை முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன.
கடந்த 75 ஆண்டுகளில் மிகவும் சக்திவாய்ந்த எல் நினோ நிகழ்வுகளில் ஒன்றாக இது அமையக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது எல் நினோவின் தாக்கம் ஆரம்ப நிலையிலேயே காணப்பட்டாலும் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அதன் தாக்கம் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த காலநிலை மாற்றத்தால் கடுமையான வெப்பநிலை, வறட்சி, மழைப்பொழிவு குறைவு, நீர்ப்பற்றாக்குறை மற்றும் விவசாய பாதிப்புகள் ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எல் நினோவின் தாக்கம், இலங்கைக்கு ஏற்படக்கூடிய விளைவுகள் மற்றும் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கமளித்துள்ளார்.




