Homeஉலக செய்திஇதுவரை மொத்தம் 18 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

இதுவரை மொத்தம் 18 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

spot_img

ஈரான் உடனான போர் தீவிரமடைந்துள்ள சூழலில், அமெரிக்க ராணுவ வீரர்கள் எதிர்நோக்கும் இழப்புகளையும் போரின் நிதிச் சுமையையும் சுட்டிக்காட்டி ‘த வாஷிங்டன் போஸ்ட்’ (The Washington Post) செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, போர் தொடங்கியது முதல் இதுவரை மொத்தம் 18 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இதில் ஜோர்டான், குவைத் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் அமைந்த அமெரிக்க ராணுவ தளங்களைக் இலக்கு வைத்து நடத்தப்பட்ட ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் மட்டும் 9 பேர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், இப்போராட்ட நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா இதுவரை 37.5 பில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ₹3,62,10,00,00,000) செலவிட்டுள்ளதாக பென்டகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தொடர் ஏவுகணைத் தாக்குதல்கள், உயிரிழப்புகள் மற்றும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிதிச் சுமையால் அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் இப்போரின் தாக்கம் பெரும் காரசாரமான விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த மே மாதம் கணக்கிடப்பட்ட நிதி மதிப்பீட்டை விட தற்போது வெளியான தொகை மிகவும் அதிகமாகும். ஒப்பீட்டளவில், கடந்த சில மாதங்களிலேயே இந்தச் செலவினம் சுமார் ரூ. 68,000 கோடி வரை அதிகரித்துள்ளதாகத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய தொகையைக் கூட்டியுள்ளது, வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவத்தின் தற்காப்பு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளின் தீவிரத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர்ச் சூழல் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால், அமெரிக்கா மேற்கொண்டு வரும் இந்த ராணுவப் பங்களிப்பு அந்நாட்டின் பொருளாதாரத்தின் மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பாத பட்சத்தில், வரும் மாதங்களில் இந்த ராணுவச் செலவினம் மேலும் பல பில்லியன் டாலர்களைக் கடந்து உயரும் எனப் பொருளாதார மற்றும் ராணுவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

spot_img

Latest articles

‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

துபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர எனப்படும் ‘பஸ் லலித்’...

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்திய பாதுகாப்பு அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள்...

நீதித்துறையுடன் விளையாடக்கூடாது – சாலிய பீரிஸ் எச்சரிக்கை

தற்போதைய அரசாங்கத்திற்கு ஒருநாள் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக இவ்வளவு கடுமையான எதிர்ப்பு ஏன் எழுந்துள்ளது என்பது புரியும்...

நீதியமைச்சரின் கருத்து நீதித்துறையின் சுயாதீனம் குறித்து பாரிய கேள்விகளை எழுப்புகிறது

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக நீதியமைச்சர் ஹர்ஷண நாணாயக்கார வெளியிட்டுள்ள கருத்து, நாட்டின் நீதித்துறை அமைப்பின் சுயாதீனம் தொடர்பில்...

More like this

டொனால்ட் ட்ரம்பை படுகொலை செய்ய திட்டம்?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை படுகொலை செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளதாகக் கூறி, கடந்த ஆண்டில் இஸ்ரேலிடமிருந்து அமெரிக்காவிற்குப் பல...

கொலம்பியா நிலநடுக்கத்தால் 111 பேர் பலி

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

121 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயினில் முழு சூரிய கிரகணம்

121 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயினில் முழு சூரிய கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் அறிக்கையை மேற்கோள்கட்டி...