Homeஉள்நாட்டு செய்திஇலங்கையை சர்வதேச எண்ணெய் விநியோக மையமாக மாற்றும் மாபெரும் திட்டம்!

இலங்கையை சர்வதேச எண்ணெய் விநியோக மையமாக மாற்றும் மாபெரும் திட்டம்!

spot_img

இலங்கையை சர்வதேச எண்ணெய் விநியோக மையமாக மாற்றி, அதன்மூலம் பெருமளவு வருவாய் ஈட்டும் நோக்கில் அரசாங்கம் மாபெரும் அபிவிருத்தித் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.

இந்த திட்டம், திருகோணமலை எண்ணெய் கிடங்கு வளாகத்தை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்படவுள்ளது.

புதிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் இந்தியன் ஆயில் நிறுவனமும் இணைந்து நிர்வகித்து வரும் 81 எண்ணெய் தொட்டிகளில் 29 தொட்டிகளை நவீனமயமாக்க முன்மொழியப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் தொட்டிகளின் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும், இன்னும் மூன்று தொட்டிகளை புனரமைப்பதற்காக டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன.

துறைமுகத்திற்கு பெரிய கப்பல்கள் மூலம் கொண்டு வரப்படும் எண்ணெயை இந்த எண்ணெய் தொட்டிகளுக்கு மாற்றுவதற்காக புதிய குழாய் அமைப்பொன்றை நிறுவுவதற்கான ஆரம்பகட்ட பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான போயாவிலிருந்து இந்த குழாய் அமைப்பை அமைப்பதற்காக பிரைமா நிறுவனம் உள்ளிட்ட தொடர்புடைய தரப்புகளின் ஒப்புதலும் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் திருகோணமலை பிராந்தியத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன், இலங்கையை சர்வதேச எண்ணெய் விநியோக மையமாக உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

spot_img

Latest articles

த்ரிஷா மீது அவதூறு; உதயநிதி கைது!

நடிகை த்ரிஷா கிருஷ்ணன் குறித்த தமிழக சட்ட சபை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாகக்...

ஸ்கோலியோசிஸ் அறுவைச் சிகிச்சை முன்னேற்றங்கள் மற்றும் இலங்கை நோயாளிகளுக்கான உதவி 

ஊடக அறிக்கை  கொழும்பு – இந்தியாவின் Baby Memorial Hospital (BMH) மருத்துவர்கள், நேரடி நரம்பு கண்காணிப்பு, அறுவைச் சிகிச்சை வழிகாட்டி...

ஆறு மாதங்களில் 1.254 பில்லியன் டொலர் மதிப்பிலான வாகனங்கள் இறக்குமதி

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1.254 பில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 41,971 கோடி இலங்கை ரூபாய்)...

இந்த ஆண்டில் ஜூலை அதிக டெங்கு நோயாளிகள் பதிவான மாதம்

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளதாவது, இந்த ஆண்டில் அதிகளவிலான டெங்கு நோயாளிகள் பதிவான மாதமாக ஜூலை மாதம்...

More like this

ஆறு மாதங்களில் 1.254 பில்லியன் டொலர் மதிப்பிலான வாகனங்கள் இறக்குமதி

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1.254 பில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 41,971 கோடி இலங்கை ரூபாய்)...

இந்த ஆண்டில் ஜூலை அதிக டெங்கு நோயாளிகள் பதிவான மாதம்

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளதாவது, இந்த ஆண்டில் அதிகளவிலான டெங்கு நோயாளிகள் பதிவான மாதமாக ஜூலை மாதம்...

மகாவலி கங்கை தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம்

அடுத்த 24 மணி நேரத்திற்குள் மகாவலி ஆற்றங்கரையோரம் உள்ள பல தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத்...