ஆகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு, எதிர்வரும் ஆகஸ்ட் 19ஆம் திகதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 999,502 பயனாளிக் குடும்பங்களுக்கு, மொத்தம் 9,241,892,500 ரூபாய் வழங்கப்படவுள்ளது.
மேலும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 212,955 பயனாளிக் குடும்பங்களுக்கு, மொத்தம் 2,321,735,000 ரூபாய் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, இரண்டு கட்டங்களிலும் சேர்த்து 1,212,457 குடும்பங்களுக்கு ரூ.11,563,627,500 ஆகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது.




