– ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன
முன்னாள் ஜனாதிபதிகள் மீது நீதித்துறையில் தலையீடு செய்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும், அவர்களில் எவரும் நீதிபதிகளை நியமிக்காமல் நீதித்துறை பதவிகளை காலியாக வைத்திருக்கவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போது உச்ச நீதிமன்றத்திலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் தலா நான்கு நீதிபதிகள் பற்றாக்குறை நிலவுவதாகவும், கீழ்நிலை நீதிமன்றங்களில் உள்ள பல நீதிபதிகள் அந்தப் பதவிகளுக்காக காத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஜனாதிபதி அண்மையில் பொதுக்கூட்டங்களில் குறிப்பிட்ட சில அரசியல்வாதிகள் விரைவில் சிறைக்கு செல்வார்கள் என்றும், அதற்காக “கிரிபத்” சாப்பிடத் தயாராக இருக்குமாறும் கூறிவருகின்ற நிலையில், கீழ்நிலை நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்புகளைப் பொறுத்து அவர்களுக்கு உயர்பதவி வழங்கும் வகையில் அந்தப் பதவிகள் காலியாக வைக்கப்பட்டுள்ளனவோ என்ற சந்தேகம் மக்களிடையே எழுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலைமையைப் பார்க்கும்போது தமக்குள் கடுமையான வெறுப்புணர்வு ஏற்படுவதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன மேலும் கூறினார்.



