ஒவ்வொரு குடிமகனும் வாகனத்தைப் பயன்படுத்தக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் யுத்த நிலைமை முடிவடைந்தவுடன், வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக வரி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த வாகனக் கண்காட்சி மற்றும் பேரணியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
சிறிய ரக வாகனங்கள் முதல் சொகுசு மற்றும் அதிநவீன மோட்டார் வாகனங்கள் வரையிலான பல்வேறு வாகனங்கள் இந்தப் பேரணியில் கலந்துகொண்டன.
இந்தப் பேரணி கொழும்பு போர்ட் சிட்டி வளாகத்திலிருந்து வோட்டர்ஸ் எட்ஜ் வரை நடைபெற்றது.




