Homeஉள்நாட்டு செய்திகண்டியில் இன்று முதல் 11 நாட்களுக்கு மதுபானசாலை மூடல்

கண்டியில் இன்று முதல் 11 நாட்களுக்கு மதுபானசாலை மூடல்

spot_img

கண்டி எசல பெரஹெரா வீதி உலா இன்று (18) ஆரம்பமாகும் நிலையில், இன்று முதல் தொடர்ந்து 11 நாட்களுக்கு கண்டி நகர எல்லை மற்றும் அதனை அண்மித்த சில பகுதிகளில் உள்ள மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, கண்டி கடவத் சதர மற்றும் கங்கவட்ட கோரளை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படவுள்ளன.

அத்துடன், குண்டசாலை பிரதேச செயலகப் பிரிவின் நத்தரம்பொத்த கிராம அலுவலர் பிரிவில் பிரதான வீதிக்கு அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் வரையிலான அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கண்டி எசல பெரஹெராவின் முதல் கும்பல் பெரஹெரா இன்று (18) வீதி உலா வருவதிலிருந்து, பெரஹெரா நிறைவடையும் ஆகஸ்ட் 28ஆம் திகதி வரை மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருக்கும்.

இதற்கு இணையாக, கண்டி மாநகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள இறைச்சி விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு கண்டி மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

spot_img

Latest articles

கெஹெலிய மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க வந்திருந்த நிலையில், அங்கு...

ஒவ்வொரு குடிமகனுக்கும் வாகனம்!

ஒவ்வொரு குடிமகனும் வாகனத்தைப் பயன்படுத்தக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில்...

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி ஆட்சிக் காலத்தை நீடிக்க அரசு திட்டம்

2027ஆம் ஆண்டு – பாட்டலி சம்பிக்க ரணவக்க தற்போதைய அரசாங்கம் 2027ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி, ஜனாதிபதியின்...

அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்

– சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு தேர்தல் காலத்தில் 12 இலட்சம் ரூபாய்க்கு ‘Witz’ ரக மோட்டார் வாகனங்களை வழங்குவதாக...

More like this

கெஹெலிய மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க வந்திருந்த நிலையில், அங்கு...

ஒவ்வொரு குடிமகனுக்கும் வாகனம்!

ஒவ்வொரு குடிமகனும் வாகனத்தைப் பயன்படுத்தக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில்...

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி ஆட்சிக் காலத்தை நீடிக்க அரசு திட்டம்

2027ஆம் ஆண்டு – பாட்டலி சம்பிக்க ரணவக்க தற்போதைய அரசாங்கம் 2027ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி, ஜனாதிபதியின்...