கண்டி எசல பெரஹெரா வீதி உலா இன்று (18) ஆரம்பமாகும் நிலையில், இன்று முதல் தொடர்ந்து 11 நாட்களுக்கு கண்டி நகர எல்லை மற்றும் அதனை அண்மித்த சில பகுதிகளில் உள்ள மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, கண்டி கடவத் சதர மற்றும் கங்கவட்ட கோரளை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படவுள்ளன.
அத்துடன், குண்டசாலை பிரதேச செயலகப் பிரிவின் நத்தரம்பொத்த கிராம அலுவலர் பிரிவில் பிரதான வீதிக்கு அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் வரையிலான அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கண்டி எசல பெரஹெராவின் முதல் கும்பல் பெரஹெரா இன்று (18) வீதி உலா வருவதிலிருந்து, பெரஹெரா நிறைவடையும் ஆகஸ்ட் 28ஆம் திகதி வரை மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருக்கும்.
இதற்கு இணையாக, கண்டி மாநகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள இறைச்சி விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு கண்டி மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.




