Homeஉள்நாட்டு செய்திஇலங்கையின் பொருளாதாரம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் மகிழ்ச்சி செய்தி

இலங்கையின் பொருளாதாரம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் மகிழ்ச்சி செய்தி

spot_img

கடுமையான பொருளாதார மற்றும் கொடுப்பனவு சமநிலை நெருக்கடியைத் தொடர்ந்து, இலங்கைப் பொருளாதாரம் தற்போது மீட்சியடைந்து வருவதுடன், நெருக்கடிக்கு முன்னர் காணப்பட்ட நிலையை அண்மித்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இராஜதந்திரிகள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறுகிய காலத்திற்குள் இவ்வாறான வேகமான பொருளாதார மீட்சியை அடைய முடிந்திருப்பது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை எனவும் மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் இறையாண்மை கடன் தரப்படுத்தலை (Sovereign Credit Rating) மேலும் உயர்த்துவதற்காக சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனங்கள் மூன்றுடனும் தற்போது பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல், வெளிநாட்டு செலாவணி கையிருப்பை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் அரச கடனை மறுசீரமைத்தல் ஆகிய நடவடிக்கைகள் மூலம் நாட்டின் பேரண்டப் பொருளாதார ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார ஸ்திரப்படுத்தல் திட்டங்களின் ஊடாக வெளிநாட்டு கையிருப்பை மீண்டும் கட்டியெழுப்ப முடிந்துள்ளதாகவும், அதேவேளை பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் நிதி நிலுவைகளை மீட்டெடுக்கவும் முடிந்துள்ளதாகவும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

கடுமையான கொடுப்பனவு சமநிலை நெருக்கடியை எதிர்கொண்ட பின்னர், மிகக் குறுகிய காலத்திற்குள் பொருளாதாரத்தை மீட்டெடுத்த நாடாக இலங்கை சர்வதேசத்திற்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக விளங்குகிறது எனவும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

நேபாளத்தில் பதறவைக்கும் களம்! உயிரிழப்பு 160 ஆக உயர்வு

படத்தில் நீங்கள் பார்க்கும் அழகான பக்லிங் (Bhakling) கிராமம், திபெத் எல்லைக்கு அருகே நேபாளத்தின் 'ரசுவா' (Rasuwa) மாவட்டத்தில்...

ஜனாதிபதி அநுர ஒரு உன்னத, புத்திசாலித்தன தலைவர்

– பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தற்போதைய ஜனாதிபதி அநுர திசாநாயக்க அவர்கள் உன்னதமான புத்திசாலித்தனமான தலைவர் என...

நீண்ட வார இறுதியில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தைத் தவிர்ந்த ஏனைய எரிபொருள் விநியோக நிறுவனங்கள் கடன் அடிப்படையில் எரிபொருளை வழங்க மறுத்து வருவதால்,...

போதைப்பொருள் விநியோக வலையமைப்புடன் கடந்த கால அரசியல்வாதிகளுக்கு நேரடித் தொடர்பு!

இலங்கையின் போதைப்பொருள் விநியோக வலையமைப்பின் பின்னணியில் கடந்த காலத்தில் அரசியல் அதிகாரம் நேரடியாகத் தொடர்புபட்டிருந்ததாகவும், தற்போதைய அரசாங்கத்தின் கீழ்...

More like this

ஜனாதிபதி அநுர ஒரு உன்னத, புத்திசாலித்தன தலைவர்

– பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தற்போதைய ஜனாதிபதி அநுர திசாநாயக்க அவர்கள் உன்னதமான புத்திசாலித்தனமான தலைவர் என...

நீண்ட வார இறுதியில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தைத் தவிர்ந்த ஏனைய எரிபொருள் விநியோக நிறுவனங்கள் கடன் அடிப்படையில் எரிபொருளை வழங்க மறுத்து வருவதால்,...

போதைப்பொருள் விநியோக வலையமைப்புடன் கடந்த கால அரசியல்வாதிகளுக்கு நேரடித் தொடர்பு!

இலங்கையின் போதைப்பொருள் விநியோக வலையமைப்பின் பின்னணியில் கடந்த காலத்தில் அரசியல் அதிகாரம் நேரடியாகத் தொடர்புபட்டிருந்ததாகவும், தற்போதைய அரசாங்கத்தின் கீழ்...