படத்தில் நீங்கள் பார்க்கும் அழகான பக்லிங் (Bhakling) கிராமம், திபெத் எல்லைக்கு அருகே நேபாளத்தின் ‘ரசுவா’ (Rasuwa) மாவட்டத்தில் போட்டே கோஷி ஆற்றுப் படுகையில் அமைந்திருந்த ஒரு சொர்க்க பூமி.
ஒரே நாளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு, அந்த வண்ணமயமான நகரை இடிபாடுகள் நிறைந்த பாறை நிலப்பரப்பாக அடியோடு மாற்றிவிட்டது.
தற்போது வெளியாகி உள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்தத் திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திபெத் பகுதியில் ஏற்பட்ட 4.4 ரிக்டர் நிலநடுக்கத்தால் நிலச்சரிவு ஏற்பட்டு, லெண்டே ஆற்றின் (Lhende River) பாதையில் பனி மற்றும் பாறை இடிபாடுகள் விழுந்து அடைபட்டன.
அந்த இயற்கை அணை நீர் அழுத்தம் தாங்காமல் உடைந்ததால் (Glacial / Avalanche Lake Burst) தான் இந்தத் திடீர் பேரழிவு ஏற்பட்டது.
தமிழர்களின் நிலை:
கும்பகோணம் டிராவல்ஸ் ஏஜென்சி மூலம் கயிலாய யாத்திரை சென்ற 57 தமிழர்களில் (தஞ்சாவூர், திருச்சி, கடலூர், மயிலாடுதுறை, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள்), 20 பேர் நேபாள எல்லையோர போலீஸ் முகாமில் பாதுகாப்பாகத் தஞ்சம் அடைந்துள்ளனர்.
தொலைத்தொடர்பு கோபுரங்கள் சேதமடைந்துள்ளதாலும் பாதை தடைபட்டுள்ளதாலும் மற்ற பயணிகளைத் தொடர்பு கொள்ளும் முயற்சிகளில் நேபாள ராணுவ ஹெலிகாப்டர்களும், இந்தியத் தூதரகமும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.




