நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் (FCID) எதிர்வரும் 24 ஆம் திகதி விசாரணைக்காக அழைக்கப் பட்டிருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (16) அதிகாலை திடீரென வெளிநாடு சென்றுள்ளார்.
அவரிடம் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் பல்வேறு நிதி முறைகேடுகள் மற்றும் விசாரணைகள் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காகச் எதிர்வரும் 24 ஆம் திகதி முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுத்திருந்தனர்.
எனினும், குறிப்பிட்ட திகதிக்கு சில தினங்களே எஞ்சியுள்ள நிலையில், அவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வெளிநாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.




