ஜனாதிபதி பொலன்னறுவையில் தெரிவித்திருந்தபோதிலும், குளங்கள் புனரமைப்புக்காக இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு பெருமளவிலான குளங்களை புனரமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா அல்லது அது தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவில்லை எனவும், ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள வரவு–செலவுத் திட்ட நிதி மூலம் திட்டத்தை முன்னெடுக்க முடியுமா என்பது பரிசீலிக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறு முடியாவிட்டால், அடுத்த வரவு–செலவுத் திட்டத்தில் இதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்படலாம் எனவும் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.




