இந்த ஆண்டில் இதுவரை இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 98,081 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
செப்டெம்பர் மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 2,590 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த ஆண்டில் டெங்கு காரணமாக இதுவரை 74 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் மாத்திரம் 51,679 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 35 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் டெங்கு அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.




