web log free
May 08, 2024

மக்கள் வங்கி கோடி அதிர்ஷ்டம் 2023 மாபெரும் சீட்டிழுப்பில் கோடீஸ்வர வெற்றியாளர் தெரிவு

'மக்கள் வங்கி பணம் அனுப்பல் சேவை கோடி அதிர்ஷ்டம் -2023' இன் மாபெரும் சீட்டிழுப்பில் ரூபா. 10 மில்லியன், ரூபா. 3 மில்லியன் மற்றும் ரூபா. 2 மில்லியன் பரிசுத் தொகைகளுக்கான வெற்றியாளர்களைத் தெரிவு செய்யும் நிகழ்வு மக்கள் வங்கியின், வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைகள் வளாகத்தில் அண்மையில் இடம்பெற்றது. 

2023 டிசம்பர் 10 முதல் 2023 டிசம்பர் 31 வரையிலான வாராந்த வெற்றியாளர்களும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான இலட்சாதிபதி;களும் நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தமக்கும் தமது குடும்பங்களுக்கும் சிறந்த வாழ்க்கையை கட்டியெழுப்பி, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த அயராது உழைக்கும் இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களை ஊக்குவிப்பதற்காகவும், பாராட்டுவதற்காகவும் மக்கள் வங்கி 'கோடி அதிர்ஷ்டம் 2023' சீட்டிழுப்பை ஆரம்பித்து.

கிளைவ் பொன்சேகா - மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரிஃபொது முகாமையாளர், அஸ்ஸாம் ஏ. அஹமத் - நிதித் தலைவர், நிபுணிகா விஜயரத்ன - பிரதிப் பொது முகாமையாளர் (வங்கி ஆதரவு சேவைகள்), ஈ.ஏ.எம். திஸாநாயக்க - பிரதம உள்ளக கணக்காய்வாளர், நாலக விஜயவர்தன - சந்தைப்படுத்தல் தலைவர், அருணி லியனகுணவர்தன - உதவிப் பொது முகாமையாளர், வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைகள், ரேணுகா அருணாச்சலம் - பிரதம முகாமையாளர், வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைகள், திலினி பெரேரா - சிரேஷ்ட முகாமையாளர், வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைகள், விபுல வர்ணகுல - சிரேஷ்ட முகாமையாளர், தகவல் தொழில்நுட்பம், நதீஷா தென்னகோன் - முகாமையாளர், வெளிநாட்டு நாணயக் கணக்கு மற்றும் சுதீர சமரசிங்க – மேல்மாகாண வருமான வரித் திணைக்களத்தின் சிரேஷ்ட மதிப்பீட்டாளர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.