web log free
October 18, 2024

இணையவழி CRIB அறிக்கைகளுக்கான அணுகலை வழங்கும் முதலாவது முக்கியமான முறைசார் வங்கியாக மாறியுள்ள மக்கள் வங்கி

வங்கி, வாடிக்கையாளர்களுக்கு இணையவழி CRIB அறிக்கைகளுக்கான அணுகலை வழங்கும் முதலாவது முக்கியமான முறைசார் வங்கியாக மாறியுள்ளது. 

வாடிக்கையாளர்கள் தமது தனிப்பட்ட கடன் அறிக்கைகள் (MyReport) மற்றும் கடன் தரப்படுத்தல் புள்ளி (CRIB Score)) தொடர்பில் அறிந்துகொள்வதற்காக பதிவுசெய்து, கோரிக்கை விடுப்பதற்கான, சிரமங்களற்ற மற்றும் திறன்மிக்க வழிமுறையை அறிமுகப்படுத்தும் வகையில் கடன் தகவல் பணியகத்துடன் (Credit Information Bureau - CRIB ) ஏற்படுத்தப்பட்டுள்ள புதுமையான கூட்டாண்மை தொடர்பில் மக்கள் வங்கி பெருமையுடன் அறிவித்துள்ளது.

தனிநபர் ஒருவரோ அல்லது நிறுவனம் ஒன்றோ கடனொன்றுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பதாக தமது கடன் தரப்படுத்தல் தொடர்பில் சிறப்பாக விளங்கிக் கொள்வதற்கு 'MyReport' மிகவும் முக்கியமானது. இந்த அத்தியாவசியமான மற்றும் புத்தாக்கமான சேவை தற்போது '‘People's Pay’ wallet app மூலம் தங்குதடையின்றி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையில் முக்கியமான முறைசார் வங்கியொன்றால் இந்த வகையில் முதன்முறையாக வழங்கப்படும் சேவையாக மாறியுள்ளது.  

இன்றைய வேகமான டிஜிட்டல் யுகத்தில், தனது வாடிக்கையாளர்களின் பரிமாண மாற்றம் கண்டு வருகின்ற தேவைகளை நிவர்த்தி செய்யும் முயற்சிகளை மக்கள் வங்கி தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.

வாடிக்கையாளர்கள் உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் இருந்தும் கூட, தாம் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே முக்கியமான நிதியியல் தகவல் விபரங்களை அணுகுவதற்கு எமது வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பளிப்பதை உறுதி செய்து, மகத்தான டிஜிட்டல் வங்கிச்சேவை அனுபவங்களை வழங்குவதில் வங்கி கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கு இந்த சமீபத்தைய முயற்சி சிறந்ததொரு சான்றாகும். 

'இந்த வசதியின் அறிமுகமானது வாடிக்கையாளர்களின் சௌகரியத்தை மேம்படுத்தி, டிஜிட்டல் மாற்றத்தை உள்வாங்குவதில் எமது அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றது,' என்று மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் திரு. கிளைவ் பொன்சேகா அவர்கள் குறிப்பிட்டார்.

'முன்னெப்போதும் இல்லாத வகையில், உலகளாவிய தொற்றுநோய் ஏற்படுத்திய மாற்றங்களுக்கு பதிலளிக்கும் வகையில், எமது வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக டிஜிட்டல் தீர்வுகள் மீது நாம் மூலோபாயரீதியாக முதலீடுகளை மேற்கொண்டுள்ளோம். 'MyReport' இல் CRIB  அறிக்கைக்கான வேண்டுகோள் விண்ணப்பங்களை ஒருங்கிணைத்துள்ளதன் மூலமாக, இலங்கையில் டிஜிட்டல் வங்கிச்சேவையில் புதியதொரு தர ஒப்பீட்டு நியமத்தை நாம் ஏற்படுத்தியுள்ளோம்,' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.    

வாடிக்கையாளர்கள் தற்போது எவ்விதமான ஆவண நடைமுறைகளோ அல்லது கூடுதல் சரிபார்ப்பு வழிமுறைகளோ இன்றி, '‘People's Pay’ wallet app மூலமாக நேரடியாகவே தமது CRIB அறிக்கையை (MyReport) கோருவதற்கான பதிவு நடைமுறையை மேற்கொள்ளலாம். இதற்கான பதிவை மேற்கொண்ட பின்னர், இந்த app இல் ஒரு சில எளிய படிகளின் மூலமாக, மிக இலகுவாக 'MyReport' ஐப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த பாதுகாப்பான, இலகுவாக உபயோகிக்கக்கூடிய தளமானது வாடிக்கையாளர்களின் தகவல் விபரங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் அதேசமயம், தமது கடன் அறிக்கைகள் மற்றும் தரப்படுத்தல் புள்ளிகளை இலகுவாக அணுகுவதற்கும் வாய்ப்பளிக்கின்றது.     

CRIB  'MyReport' சேவைக்கான பதிவு இலவசமாக வழங்கப்படுகின்றது. ('CRIB Score)' வழங்கும் தங்குதடையின்றிய வங்கிச்சேவை அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், வாடிக்கையாளர்கள் தமது மக்கள் வங்கிக் கணக்குகள் மூலமாக இச்சேவைக்காக இணையவழியில் கொடுப்பனவுகளை மிகவும் சௌகரியமாக மேற்கொள்ள முடியும்.

வங்கித்துறையில் தொழில்நுட்பரீதியான மேம்பாடுகளைப் பொறுத்தவரையில் மக்கள் வங்கி தொடர்ந்தும் CRIB  வகித்து வருகின்றது. 'MyReport' உடன் CRIB  இன் 'CRIB Score)' கோரிக்கை விண்ணப்பத்தை ஒருங்கிணைத்துள்ளமை, இலங்கையில் முன்னிலை வகிக்கும் டிஜிட்டல் வங்கிச்சேவை வழங்குநராக மாறுவதை நோக்கிய வங்கியின் பயணத்தில் மற்றுமொரு முக்கியமான சாதனையாகும்.