web log free
April 01, 2025

அரசாங்க ஊழியர்களுக்கான சுகாதார அணுகலை வளப்படுத்துவதற்காக NITF உடன் பங்குதாரராகும் சுவசெவன வைத்தியசாலை

சுவசெவன வைத்தியசாலையானது அக்ரஹார மருத்துவ காப்பீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் இலங்கை அரசாங்க ஊழியர்களுக்கான சுகாதார நன்மைகளை விரிவுபடுத்துவதற்காக தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்துடன் பங்குதாரராகியுள்ளது. இச்கூட்டுடைமையானது அரசதுறை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு முன்னேற்றகரமான மருத்துவ பராமரிப்பினை மேலும் அணுகத்தக்கதும் பெறக்கூடியதாகவுமாக்குவதனை நோக்கமாகக் கொண்டுள்ளது. இப்பங்குடைமையின்கீழான, முக்கிய நன்மைகளாக அக்ரஹாரா நோயாளிகளின் அனுமதிக் கட்டணம் தள்ளுபடியாக்கப்பட்டுள்ளமை, வெளிநோளாளர் பிரிவுகளிற்கான வருகைகளுக்கு இலவச ஆலோசனை, CT, MRI, Mammogram, X-Ray, மற்றும் USS போன்ற ஆய்வுகூட பரிசோதனைகள் மற்றும் கதிரியக்க சேவைகளுக்கு 10%விலைக்கழிவு, ECHO மற்றும் ECG பரிசோதனைகளுக்கான 10% விலைக்கழிவு என்பவற்றை உள்ளடக்குகின்றது. மேலதிகமாக, 10 கிமீ சுற்றளவில் இலவச ஆம்புலன்ஸ் சேவைகள் காணப்படுவதுடன், அறை கட்டணங்களில் 20%விலைக்கழிவு வழங்கப்படுவதுடன், இதய வால்வு அறுவைச்சிகிச்சைகளுக்கு செல்லும் நோயாளர்கள் 50,000ரூபா விலைக்கழிவினையும் பெற்றுக்கொள்ளலாம்.

1997 ஆம் ஆண்டு தாபிக்கப்பட்டு 2006 ஆம் ஆண்டு முதல் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தினால் முகாமைத்துவப்படுத்தப்படும், அக்ரஹார மருத்துவ காப்புறுதி நிகழ்ச்சித்திட்டமானது, 1.5 மில்லியன் அரச துறை பணியாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சேவையாற்றியுள்ளது. இப்பங்குடைமையானது கண்டியின் மிக நம்பிக்கையான தனியார் சுகாதாரசேவை வழங்குநரான, சுவசெவன வைத்தியசாலையில் விசேடத்துவப்படுத்தப்பட்ட பராமரிப்பினை அணுக காப்புறுதிபெற்ற ஊழியர்களுக்கு இயலுமாக்குகின்றது.

சுவசெவன வைத்தியசாலைகள்: சுகாதாரச்சேவைகளில் தனிச்சிறப்பானது

ஏறத்தாழ 40 வருட சேவை அனுபவத்துடன், கண்டியில் தரமான சுகாதார சேவையில் கலங்கரை விளக்கமாக விளங்குகின்றது. வைத்தியசாலையானது சௌகரியமானதும், அந்தரங்கமானதும், மற்றும் நிம்மதியானதுமான சுகம் பெறும் சூழலை உறுதிப்படுத்தி, அதிநவீன வசதிகள், நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ பராமரிப்பு, மற்றும் தரமானதிலிருந்து அதிசொகுசு வரையில் வேறுபடும் 150 நோயாளர் அறைகள் என்பவற்றை வழங்குகின்றது.

சுவசெவன வைத்தியசாலையின் பிரதம நிறைவேற்று அதிகாரி, திரு. நலின் பஸ்குவல், இப்பங்குடைமையின் முக்கியத்துவத்தினை வெளிப்படுத்தினார்: “தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்துடனான இக்கூட்டுடைமையான இலங்கை அரசாங்க ஊழியர்களுக்கான அதிசிறப்பான சுகாதாரச் சேவைகளை வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பினை மீளவலியுறுத்துகின்றது. அக்ரஹாரா நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஆதரவளிப்பதன்மூலம், அரச ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எமது சேவைகளையும் பிரத்தியேக சலுகைகளையும் விரிவுபடுத்துவதில் நாம் பெருமைக்கொள்கின்றோம்.” மிகவும் இயல்பானதாகவும் ஈடுபாடுமிக்கதுமான பதிப்பு இங்கு காணப்படுகின்றது.

வியாபார அபிவிருத்தித் துறைத் தலைவர், திரு.ஸ்ரீமத் வெலிவிட அவர்கள் “சுவசெவன வைத்தியசாலையானது இதய வால்வு மாற்று சத்திரசிகிச்சை வழங்கலை இம்மாத இறுதியில் தொடங்கும் என்பதனை அறிவிப்பதில் நாம் பெருமையடைகின்றோம்.” என்றார். “அதிநவீன தொழிநுட்பம் மற்றும் அதிநவீன உபகரணங்களுடன், எமது நோயாளர்களுக்கு உயர் மட்ட பராமரிப்பினை வழங்குவதற்கும் மற்றும் சிறப்பான பெறுபேறுகளை உறுதிப்படுத்துவதற்கும் நாம் தாயராகவுள்ளோம். இதன் ஒரு பகுதியாக, இவ்வலயத்திலான நவீன சுகாதாரச் சேவையில் ஒரு பாரிய மைல்கல்லாக, கண்டியில் முதன்முறையாக இதய அறுவைச் சிகிச்சைகளுக்காக அரப்பணிக்கப்பட்ட தனித்த சிகிச்சைக்கூடமொன்றை அறிமுகப்படுத்துவதில் நாம் பெருமையடைகின்றோம்” என்றார்.

இப்பங்குடைமையானது அரச துறை ஊழியர்களுக்கு, அவர்களுக்கு உரித்தான பராமரிப்பினை அவர்கள் பெறுவதனை உறுதிப்படுத்தி, பெற்றுக்கொள்ளக்கூடியதும், நம்பகத்தன்மையானதும், மற்றும் உயர் தரத்திலுமான சுகாதார சேவைகளை வழங்குவதற்கான சுவசெவன வைத்தியசாலைகள் மற்றும் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் பகிரப்பட்ட பணியினை வெளிப்படுத்துகின்றது.

சுவசெவன வைத்தியசாலை குறித்து

கண்டியின் இதயத்தில் அமைந்துள்ள, சுவசெவன வைத்தியசாலையானது நான்கு தசாப்தங்களிற்கும் மேலாக தனியார் சுகாதார சேவை வழங்கலில் தலைமையாக விளங்குகின்றது. தனித்த பராமரிப்பு, முன்னேற்றகரமான தொழிநுட்பம், மற்றும் நோயாளிகளின் சௌகரியத்தின் மீதான கவனம் என்பவற்றிற்காக நன்கறியப்பட்ட, சுவசெவனயானது இலங்கை முழுதுமாக அதிசிறப்பான சுகாதார சேவைகளின் தரத்தினை கட்டமைப்பதனை தொடர்ந்தும் முன்னெடுக்கின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd