SDB வங்கியானது மூலப்பொருள் விநியோகத்தர்கள் மற்றும்கருதியுள்ள கொள்வனவாளர்கள் ஆகிய இருவருக்குமானநிலைபேண் நிதியிடலை வலுப்படுத்துவதனால்சமுதாயங்களை வலுப்படுத்துவதற்கான வங்கியின் மையகொள்கையுடன் இணைந்தவாறு மற்றொரு பெறுமதியினால்செலுத்தப்படும் வியாபார கிடைப்பரப்பொன்றாக பெறுமதிசங்கிலி நிதியிடலை (VFC) தொடங்கவுள்ளது. VFC வியாபாரமாதிரியானது தத்தமது தனித்துவமான தேவைகளுக்கெனபிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பொருத்தமான நிதிசார்ஆதரவினை வழங்குவதனால் பல்வேறு துறைகளையும்வலுப்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சமீபத்திய முயற்சியாக, பாலுற்பத்தி துறைக்கான VFC ஒழுங்குகளை வெற்றிகரமாக வெளியிட்டுநிறைவுசெய்துள்ளது. இத்துவக்த்துடனான ஒத்துழைப்புடன்முன்னெடுக்கப்படும் செயற்பாட்டை SDB வங்கியின்குளியாப்பிட்டிய கிளை முகாமைத்துவம் செய்கின்றது.
இந்நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் ஒதுக்கப்படும் நிதியானதுகால்நடை கொட்டகைகளை புனருத்தாரனம்செய்தல்,கொட்டகை கட்டுமானம் மற்றும் மந்தை கொள்வனவுஆகியவற்றினை வளப்படுத்தும் கருவிகளாக விளங்குகின்றன. இம்முயற்சிகள் உள்ளுர் பாலுற்பத்தி கைத்தொழிலினைவளர்ப்பதற்கும் விருத்திசெய்வதற்குமாககுறிப்பிடத்தக்களவில் பங்களிக்கும் எனஎதிர்ப்பார்க்கப்படுகின்றது.
வங்கியானது பாலுற்பத்தி விவசாயிகளை அவர்களதுதுறைகளில் அறிவூட்டுவதனை நோக்கமாக கொண்டவிழிப்புணர்வு அமர்வினை நடாத்தியது. இவ்வமர்வானதுஅவர்களது உற்பத்தி மற்றும் நிதியியல் அறிவினைவளப்படுத்துவதற்கு அத்தியாவசியமான பெறுமதிமிக்க அறிவுமற்றும் திறனை உள்ளடக்கியிருந்தது.
இத்துவக்கம் குறித்து கருத்துரைத்த, SDB வங்கியின்நிறைவேற்று பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி, கபிலஆரியரத்ன அவர்கள், 'SDB வங்கியின் பெறுமதி சங்கிலிநிதியிடலானது தனித்துவமான நிதியியல் தீர்வுகள் மூலமாகதுறைசார் வளர்ச்சியினை முன்னகர்த்தும் எமதுஅரப்பணிப்பினை எடுத்துக்காட்டுகின்றது. எமது முதலாவதுசெயற்றிட்டமாக, CEETEE உடனான எமது கூட்டுறவானதுபாலுற்பத்தி துறையின் அபிவிருத்திக்கான எமதுஅர்ப்பணிப்பிற்கான உதாரணமாகின்றது. அத்தகையதுவக்கங்கள் அக்குறித்த துறைகளை உயர்த்துவதுமாத்திரமின்றி தேசிய அளவிலான அபிவிருத்திக்குபங்களிக்கக்கூடிய பரந்த பொருளாதார பரப்பிற்கும்பங்களிக்கும் என நாம் நம்புகின்றோம்' என்றார்.
பாலுற்பத்தி விவசாயிகளுக்கான விழிப்புணர் அமர்வானது மாடுஉற்பத்தியினை மேம்படுத்தல், பால் பாதுகாப்பு தொழிநுட்பகொள்வனவு மற்றும் நிதிசார் அறிவு போன்ற முக்கியவிடயங்களை உள்ளடக்கியிருந்தது. வெளிவாரி நிபுணர்கள்மற்றும் SDB வங்கி அணியுடனான பங்குடைமையில்நடாத்தப்பட்ட,இப்பயிற்சிப்பட்டறையானது பாலுற்பத்திவிவசாயிகளை அவர்களுக்குத் தேவையான அறிவு மற்றும்திறன்களுடன் வலுப்படுத்துவதனை நோக்கிய முக்கியதொருஅடியாக விளங்கியது.
சமுதாயங்கள், கூட்டுத்தாபனங்கள்,சுயதொழில்வாண்மையாளர்கள், மற்றும் முன்னேற்றகரமானசிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கனைஎப்பொழுதும் ஆதரிக்கும் வங்கியாக, அதே போன்று உள்ளுர்பாலுற்பத்தி துறை அபிவிருத்திக்கு அர்ப்பணிப்புடையதாகவிளங்குவதுடன் இத்துறையில் நிலைபேறான அபிவிருத்திமற்றும் வளர்ச்சியினை பேணுவதற்கு பங்குதாரர்களுடன்தொடர்ந்தும் கூட்டிணைய எதிர்பார்த்துள்ளது
SDB வங்கி:
வாடிக்கையாளர் மைய மற்றும் ஒவ்வொரு தனிநபரினதும் தேவைகளுக்கென நேர்த்தியாக்கப்பட்ட பொருத்தமான ஆதரவிற்கென அர்ப்பணிக்கப்பட்ட, எதிர்காலத்திற்கு தயாரான வங்கியொன்றாக, கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் பிரதான பலகை மற்றும் BB +(lka) பிட்ச் ரேட்டிங்கிலான பட்டியலுடன், இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குப்படுத்தப்படுகின்ற அனுமதிப்பெற்ற விசேடத்துவப்படுத்தப்பட்ட வங்கியொன்றாகும். நாடளாவியரீதியில் 94 கிளை வலையமைப்பினூடாக, வங்கியானது நாடுமுழுதும் அதனது சில்லறை, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள், கூட்டுறவு, மற்றும் வியாபார வங்கியியல் வாடிக்கையார்களிற்கு நிதிச் சேவைகளை பொருத்தமான வகைகளில் வழங்குகின்றது. நிலைபேறான நடைமுறைகளின் ஊடாக உள்ளுர் சமுதாயங்கள் மற்றும் வியாபாரங்களை உயர்த்தும் துடிப்பான குவிமையத்துடனான சுற்றுச்சூழல், சமூக, மற்றும் ஆட்சி கோட்பாடுகள் SDB வங்கியின் நெறிமுறைகளில் ஆழப்பதிந்துள்ளன. நாட்டை புதிய உயரத்திற்கு இட்டுச்செல்வதனை நோக்கமாகக்கொண்டு, மகளிரை வலுப்படுத்தல், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளின் நிலைபேறான அபிவிருத்தி மற்றும் எண்ணிய உள்ளடக்கம் என்பவற்றை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.