கார்கில்ஸ் வங்கி லிமிட்டெட் நிறுவனத்தின் கடன் தர மதிப்பீட்டை ‘A-(lka)’ இலிருந்து ‘A+(lka)’ ஸ்திரநிலை தோற்றத்திற்கு மேம்படுத்தியுள்ளது.
இலங்கை வங்கிகளின் தேசிய தர மதிப்பீடுகள் முறைமையை நாட்டின் பிற வழங்குநர்களுடன் ஒப்பிடும் போது அவை தமது கடன் தகுதிக்கான சிறந்த அளவுகோலாக கருதுகின்றன.
இலங்கையின் தேசிய தர மதிப்பீட்டு அளவை மறுசீரமைப்பின் விளைவாக கார்கில்ஸ் வங்கி லிமிட்டெட்டின் தேசிய நீண்ட கால தர மதிப்பீடு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய மற்றும் உள்நாட்டு பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் வங்கியின் கடன் மதிப்பீட்டின் இந்த நேர்மறையான மீள்திருத்தம், வங்கியின் முயற்சிகள் மற்றும் நெருக்கடி நிலைமைகளை எதிர்கொள்ளும் அர்ப்பணிப்பு, வாடிக்கையாளர்களை நிதியியல் ரீதியாக இணைத்து அரவணைத்தல், கடந்த காலத்தை மறுபரிசீலனை செய்வதற்கான சுறுசுறுப்பு மற்றும் எதிர்காலத்திற்கேற்ப தன்னை மாற்றியமைத்து வருவதற்கான ஒரு சான்றாக இது அமைந்துள்ளது.
அதே சமயம், 175 ஆண்டுகளாக இலங்கை மக்களுக்கு உண்மையான சேவையை வழங்கி வந்துள்ள கார்கில்ஸ் என்ற அதன் தாய் நிறுவன வர்த்தகநாமத்தின் தளராத ஆதரவுடன் வங்கிச்சேவை தொழிற்துறையில் வலுவான சேவைகளைப் பேணி வருகின்றது.
இந்த விழுமியங்கள் மற்றும் நெறிமுறைகளின் அத்திவாரத்துடன் கட்டியெழுப்பட்ட, மற்றும் இந்த பாரம்பரியத்திற்கும், 'மனித உணர்விற்கு மதிப்பளிக்கும் வங்கி' என்ற கொள்கைக்கும் உண்மையாக அர்த்தம் கற்பிக்கும் கார்கில்ஸ் வங்கி, இந்த கருப்பொருள் சார்ந்த வங்கிச் சேவையை அனைவரையும் அரவணைக்கும் மற்றும் அணுகக்கூடிய நிதியியல் நிறுவனமாக மக்கள் மத்தியில் கொண்டு சென்றுள்ளது.
இந்த சாதனை குறித்து கார்கில்ஸ் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ராஜேந்திரா தியாகராஜா அவர்கள் கருத்து வெளியிடுகையில், 'கார்கில்ஸ் வங்கி தனது குவைஉh தரமதிப்பீட்டில் 2 இடங்கள் முன்னேறி, யு 10 (டமய) ஸ்திரநிலை மதிப்பீட்டைப் பெற்றுள்ளது என்பதை பெருமையுடன் குறிப்பிடுகிறேன்.