web log free
July 31, 2025
kumar

kumar

தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தாக்கல் செய்யப்பட்ட தகவல் அறியும் உரிமைக் கோரிக்கையைத் தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான மதிப்பிடப்பட்ட வரவு செலவுத் திட்டம் சுமார் 9,750,000,000 ரூபா என தேர்தல்கள் ஆணையாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 2023 இல் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்காக 10 பில்லியன் ரூபாய் 2024 பட்ஜெட்டில் இருந்து அங்கீகரிக்கப்பட்டது.

“பொதுத் தேர்தலை நடத்துவதற்கும் இதேபோன்ற வரவு செலவுத் திட்டம் தேவைப்படுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

 

எவ்வாறாயினும், அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன, 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த வருடம் கண்டிப்பாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என அவர் உறுதிப்படுத்தினார். "ஆனால் இரண்டு தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கத்திடம் போதிய நிதி இல்லை," என்று அவர் மேலும் கூறினார்.

சாலியவெவ 15ஆம் கட்டை பகுதியில் கை உழவு இயந்திரத்துடன் சொகுசு ஜீப் மோதியதில் உழவு இயந்திரத்தின் சாரதி காயமடைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விபத்தில் எம்.பி.க்கு காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் சாரதியுடன் தனது வாகனத்தில் புத்தளத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதிகாலை 1.30 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த ஜீப், அவருக்கு முன்னால் பயணித்த கை உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் சொகுசு ஜீப் பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளை இலக்கு வைத்து போதைப்பொருள் நடத்துபவர்கள் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாக்கும்  நபர்கள் குறித்து விசாரணை செய்யுமாறு மாளிகாகந்த பிரதான நீதவான் லோச்சனி அபேவிக்ரம வீரசிங்க பொலிஸ் அதிகாரிகளுக்கு பணிப்பு விடுத்துள்ளார்.

போதைப்பொருளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் “மாவா” என்ற போதைப்பொருளே பாடசாலை மாணவர்களை போதைப்பொருளுக்கு அடிமையாக்கும் முதல் படியாக இருப்பதால் போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்ய விசாரணைகளை நடத்துமாறும் நீதவான் எச்சரித்துள்ளார்.

இதனிடையே, அபின் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் "மாவா" என்ற போதைப்பொருளுக்கு பாடசாலை மாணவர்கள் அதிகளவு அடிமையாகி அதனை மிகக்குறைந்த விலைக்கு மாணவர்களுக்கு வழங்கி, பின்னர் போதைப்பொருளை உட்கொள்வதற்கு பழக்கப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழு உறுப்பினர்கள் கிராமம் தோறும் சென்று கட்சியை மேம்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

இந்த வருடம் தேர்தல் வருடம் எனவும் அதனை புரிந்து கொண்டு கட்சியினருடன் சமாளித்துக்கொள்ளுங்கள் எனவும் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் குழுவொன்று கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இதன்படி எதிர்வரும் மாதங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதிக் குழுக் கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Shell-RM Parks Company மற்றும் Ceylon Petroleum Storage Terminal Company ஆகியவை பெட்ரோலிய சேமிப்பு மற்றும் விநியோக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளன. 

இந்த ஒப்பந்தம் இன்று (12) கொலன்னாவையில் உள்ள லங்கா பெற்றோலிய சேமிப்பு முனைய நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டது.

அதன்படி, நாட்டில் உள்ள இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனைய நிறுவனம் மற்றும் ஷெல்-ஆர்எம் பார்க்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் இருப்புக்களை சேமித்து வைப்பது மற்றும் விநியோகித்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.

கடந்த ஜூலை மாதம் 08 ஆம் திகதி இது தொடர்பான முன் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பம்பலப்பிட்டி பொலிஸ் பரிசோதகர் சிற்றுண்டிச்சாலையில் உள்ள மரமொன்றில் சிறுநீர் கழிக்கச் சென்ற பொலிஸ் பரிசோதகரை கடுமையாக தாக்கியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பம்பலப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்ததுடன், ஆறு பேர் கொண்ட குழுவொன்று வந்து தன்னை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கியதாக தெரிவித்தார்.

இந்தக் குழுவில் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரும் இருந்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை இல்லாதொழிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை இல்லாதொழிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரு கைகளை உயர்த்தி சம்மதம் தெரிவிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை நீக்குவதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெறும், அதன் பின்னர் பிரேரணையை சர்வஜன வாக்கெடுப்புக்கு சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளன. 

இன்று (11) காலை ஐக்கிய மக்கள் சக்தியின் கட்டுகம்பொல தொகுதி அமைப்பாளராக இருந்த அசங்க ஜயவிக்ரம பெரேரா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொண்டார்.

அதன்படி இன்று முதல் அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்டத்தின் கட்டுகம்பல தொகுதி அமைப்பாளராக கடமையாற்றவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வைக்கு தனது நிறுவன பலத்தை வழங்குவதே அசங்க பெரேராவின் நோக்கமாகும்.

இது குறித்து அறிவிப்பதற்காக குருநாகல் கடுகம்பல பிரதேசத்தில் உள்ள வீட்டில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இலங்கை கடற்படையினரால் 3076 மீனவர்கள் கைது செயப்பட்டுள்ளனர்.

534 படகுகள் கடத்தப்பட்டுள்ளன. இது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களிடம் வலியுறுத்தியுள்ளதோடு, பிரதமருக்கு 9 கடிதங்களும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு 35 கடிதங்களும் எழுதியுள்ளார்.

ஆனாலும் தமிழக மீனவர்கள் பிரச்சினையை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு கையாண்டு வருகிறது.

எனவே தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசைக் கண்டித்து  11 ஆம் திகதி ராமேஸ்வரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன்பு தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் இன்று (11.02.2024) காலை 10.30 மணியளவில் இருந்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், இலங்கை கடற்படையை கண்டித்தும், இலங்கை கடற்படையால் கைது செய்யபட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்றும் தி.மு.க. நிர்வாகிகள், மீனவர்கள் என ஆயிரக்கணக்கானோர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த மீனவர் சங்கங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டிருந்தவேளை இந்தியா வழங்கிய உதவிகள் ஆதரவிற்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமான wionற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு நன்றி இந்தியா இல்லாவிட்டால் நாங்கள் தப்பியிருக்கமாட்டோம், இதன் காரணமாகவே இரு நாடுகள் மத்தியிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்துகின்றோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கேள்வி – எனது முதல் கேள்வி இந்திய இலங்கை உறவுகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள் இந்த உறவுகள் குறித்த உங்கள் தொலைநோக்கு பார்வை என்ன ?

பதில் - உண்மையில் இந்திய இலங்கை உறவுகள் முன்னேற்றமடைகின்றன. நாங்கள் இரு நாடுகளிற்கும் இடையில் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்த முயல்கின்றோம், இரு நாடுகளிற்கும் இடையிலான தொடர்புகளை அதிகரிக்க முயல்கின்றோம். இதுவே சரியான வழி என நான் கருதுகின்றேன்.

கேள்வி- இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டிருந்த வேளை 4 பில்லியன் டொலர் உதவியுடன் முன்வந்த நாடு இலங்கை உங்கள் நாட்டிற்கான இந்தியாவின் உதவியை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்-நாங்கள் இந்தியாவிற்கு நன்றியுடையவர்களாக உள்ளோம் இந்தியா இல்லாவிட்டால் நாங்கள் தப்பிபிழைத்திருக்கமாட்டோம். இதன் காரணமாகவே நாங்கள் இரு நாடுகளிற்கும் இடையிலான நெருங்கிய உறவு குறித்து கவனம் செலுத்துகின்றோம் குறிப்பாக வர்த்தக பொருளாதார வெற்றிகள் குறித்து முன்னோக்கி செல்வதற்கு இதுவே வழி.

கேள்வி- உங்கள் நாட்டின் பொருளாதார நிலைமை தற்போது எவ்வாறு உள்ளது?

பதில்- நாங்கள் கடன் மறுசீரமைப்பை முன்னெடுத்தோம் அதனை பூர்த்தி செய்துள்ளோம். நாங்கள் ஓசிசியுடன் உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளவேண்டும். எங்களின் நடவடிக்கைகளை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர், ஆரம்ப கட்ட நடவடிக்கைள் தற்போது இடம்பெறுகின்றன உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடனான உடன்படிக்கைக்கு பின்னர் நாங்கள் ஏனைய அனைத்து கடன்வழங்கிய நாடுகளுடனும் நிதியமைப்புகளுடனும் உடன்படிக்கையை செய்துகொள்ளவேண்டும்.

கேள்வி – அது எப்போது சாத்தியமாகும்?

பதில்- ஜூன் மாதமளவில் அது சாத்தியமாகும் என நினைக்கின்றேன்.

கேள்வி – பிராந்திய பாதுகாப்பு என்ற விடயம் குறித்து பேசும்போது சீன கப்பல்களின் விஜயம் குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. சீன கப்பல்களிற்கு அனுமதி வழங்குவது இல்லை என்பது குறித்து இலங்கை ஆராய்ந்து வருவதாக அறிகின்றேன். சீன கப்பல்களின் விஜயங்கள் குறித்தும் அவற்றிற்கு அனுமதி வழங்குவதில்லை என்ற தீர்மானம் குறித்தும் கருத்துகூற முடியுமா?

பதில்- நாங்கள் எப்போதும் இந்தியாவின் பாதுகாப்பை மனதில் கொண்டிருப்போம். இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைளிற்கு அனுமதியளிக்கமாட்டோம் என தெரிவித்துள்ளளோம்.

இலங்கைக்கு வந்த சென்ற சீன கப்பல்கள் கடல் ஆராய்ச்சியுடன் தொடர்புபட்டவை. அதன் காரணமாக அவற்றிற்கு நாங்கள் அனுமதி வழங்கியுள்ளோம்.

ஏனைய நாடுகளின் ஏனைய கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? இந்த ஆண்டு இலங்கையின் திறனை கட்டியெழுப்புவது என நாங்கள் தீர்மானித்துள்ளோம். ஏனையவர்களுடன் ஒத்துழைப்பதன் மூலம் இலங்கை தனது சொந்ததிறனை கட்டியெழுப்ப .வேண்டும் என நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

இதன்காரணமாக எந்தவொரு நாட்டிலிருந்தும் நீரியல் விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கு கப்பல்கள் வர முடியாது என நாங்கள் தெரிவித்துள்ளோம். ஆனால் வழமையான விஜயத்தினை மேற்கொள்ளும் கடற்படை கப்பல்களாகயிருந்தால் அவற்றிற்கு அனுமதி வழங்குவோம்.

கேள்வி – உங்களிற்கு சீனா கப்பல்களின் வருகை குறித்து தெரியவருமா?

பதில் - சீன கப்பல்கள் இலங்கைக்கு வருகின்றன, இந்திய கப்பல்கள் வருகின்றன, ஜப்பான் கப்பல்கள் வருகின்றன அனைத்து கப்பல்களும் வருகின்றன – அமெரிக்க கப்பல்கள் வருகின்றன.

கேள்வி- இந்தியா இந்த விஜயங்கள் குறித்து கவலையடைந்துள்ளது, இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனாவின் அதிகரித்துவரும் பிரசன்னம் குறித்து கவலையடைந்துள்ளது என்பதால் சீனா இந்தியாவிற்கும் உங்களிற்கும் இடையில் பிளவை ஏற்படுத்த முயல்கின்றது என கருதுகின்றீர்களா?

பதில் - சீனகப்பல்கள் நீண்டகாலமாக இலங்கைக்கு வருகின்றன. சீனா இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பிளவை ஏற்படுத்த முயலவில்லை, நாங்கள் இந்தியாவுடன் இணைந்து செயற்படவேண்டும் என்றே அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நாங்கள் கரிசனை கொள்ளவேண்டிய விடயம் என்று எதுவுமில்லை, இலங்கைக்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் இல்லை, குறையவுமில்லை, மேலும் இலங்கைக்கு வருகை தராத நாடுகளின் கப்பல்களை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு நாங்கள் ஊக்குவிக்கின்றோம்.

கேள்வி – கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் சீனாவின் பங்களிப்பு – சீனா உரிய பதில்கள் இல்லாமல் இழுத்துச்செல்கின்றதே?

பதில் - கடன் மறுசீரமைப்பு குறித்து சீனாவிடம் நோக்கம் உள்ளது. அவர்கள் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழுவில் இல்லை. ஆனால் அவர்கள் கூட்டங்களில் கலந்துகொள்கின்றனர். இதற்கான அவர்களின் கட்டமைப்பு ஏனைய நாடுகளிடமிருந்து வித்தியாசமானது என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். நாங்கள் சீனாவின் அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து செயற்படவேண்டும். அந்த நாட்டின் எக்சிம் வங்கியுடனும் இணைந்து செயற்படவேண்டும்.

கேள்வி – மற்றுமொரு முக்கியமான விடயம் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது. இது குறித்து இந்தியா தனது நிலைப்பாட்டை தெரிவித்து வருகின்றது – முன்னோக்கி செல்வதற்கான வழி என்ன?

பதில் - அடுத்த வருடம் மாகாணசபை தேர்தல்களை நடத்துவோம் நாடாளுமன்ற அமர்வுகளை ஆரம்பித்துவைத்து உரையாற்றியவேளை நான் தெரிவித்தது போல நாங்கள் ஒவ்வொரு மாகாணசபைக்கும் அதன் சொந்த பொருளாதாரத்தை வழங்க விரும்புகின்றோம்.

அதன் காரணமாக இந்தியா போன்று ஒவ்வொரு மாகாணமும் ஏனைய மாகாணத்தின் பொருளாதாரத்துடன் போட்டியிடும். இதனால் நன்மையேற்படும் பொருளாதாரம் போட்டித்தன்மை மிகுந்ததாக காணப்படும்.

மேலும் இந்த மாகாணங்கள் தங்களின் பொருளாதார சமூக அபிவிருத்தியை தேசிய கொள்கை கட்டமைப்பிற்குள் கையாளவேண்டும்.

இந்த அடிப்படையில் ஒருங்கியல் அதிகாரப்பட்டியலில் உள்ள அதிகாரங்களை அதில் அனேகமானவற்றை அல்லது தேவையானவற்றை வழங்க தயாராகவுள்ளோம்.

சில சிறுபான்மை குழுக்கள் செனெட்டிற்கான வேண்டுகோளை விடுத்துள்ளன. என்னை பொறுத்தவரைக்கும் எங்களை பொறுத்தவரைக்கும் நாங்கள் அதனை எதிர்க்கமாட்டோம். ஆனால் இதனை வெறுமனே அரசாங்கம் மாத்திரம் ஏற்றுக்கொள்ள முடியாது அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளவேண்டும். நாடாளுமன்றத்தில் பல கட்சிகள் உள்ளன என்று கூறினார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd