web log free
December 15, 2025

தம்மிக்க பெரேராவின் அறிவிப்பு

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஐம்பத்தொரு வீதமானவர்கள் தயாராக இருந்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.

கட்சி தனக்கு பத்து நிபந்தனைகளை வழங்கியுள்ளதாகவும், அந்த நிபந்தனைகளுக்கு அமைய தான் அனைத்து திட்டங்களையும் தயார் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பத்து நிபந்தனைகளுக்கு ஏற்ப திட்டம் உருவாக்கி பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது குறித்தும் திட்டமிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தம்மிக்க பெரேரா மேலும் கூறியதாவது:

நான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர், என்ன நடக்கிறது என்று பார்ப்போம். ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 115 நாட்களே உள்ளன என்றார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd