லஸ்ஸன.கொம் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்தின் உபபிரிவான லஸ்ஸன இன்னோவேசன்ஸானது, பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் டிரீட்ஸ் ஒவ் சிலோன் எனும் தன்னுடைய சமீபத்திய புதிய துவக்கத்தின் வாயிலாக ஒரு பாரிய மைல்கல்லினை எட்டியுள்ளது. டிரீட்ஸ் ஒவ் சிலோன் வணிக வளாகமானது பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் வெளியேறும் வாயிலில் அமைந்துள்ளதுடன் வெளியேறும் பயணிகளிற்கு அவர்களது அன்பிற்குரிய இலங்கையின் வாசனைத்திரவியங்களை கொள்வனவு செய்யவும் அதனை வெளிநாடுகளிற்கு எடுத்துச்செல்லவுமாக வாய்ப்பினை அளிக்கின்றது. இலங்கையர்கள் தங்களது தாய்நாட்டின் சுவையினை விரும்பினாலோ அல்லது வெளிநாட்டினர் இலங்கையின் உத்தியோகபூர்வ சுவையினை விரும்பினாலோ, டிரீட்ஸ் ஒவ் சிலோன் வணிக வளாகமானது அத்தகைய பன்முக வாடிக்கையாளர்களிற்கும் தேவையானவற்றை வழங்குகின்றது.
டிரீட்ஸ் ஒவ் சிலோன் வணிக வளாகத்தின் திறப்புவிழாவானது அதனை துவக்கி வைத்த இலங்கை விமானநிலைய மற்றும் விமானச்சேவைகள் தனியார் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜீஏ சந்திரசிறி மற்றும் லஸ்ஸன குழுமத்தின் தலைவர் / முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி லசந்த மாளவிகே மற்றும் பணிப்பாளர் பேரா. நீலிகா மாளவிகே மற்றும் ஏனைய மதிப்பிற்குரிய விருந்தினர்களுடன் பெருமைப்படுத்தப்பட்டது. இவ்வணிக வளாகத்தின் திறப்பு விழாவானது இலங்கையர் மற்றும் வெளிநாட்டினர் என இருவருக்கும் இலங்கையின் செழுமையான வாசனைத்திரவியங்கள் மற்றும் சமையற்கலை நிபுணத்துவத்தினை வெளிப்படுத்தும் ஒரு மைல்கல்லாக அமைகின்றது.
டிரீட்ஸ் ஒவ் சிலோன் தின்பண்டங்களானவை இலங்கையின் கறுவா, மிளகு, ஏலக்காய், கராம்பு, மாசி மற்றும் ஏனைய கவனமாக தேர்வுசெய்யப்பட்ட மூலப்பொருட்கள் உள்ளடங்கிய இலங்கையின் சிறப்பான நறுமணப்பொருட்களை கொண்டு கைகளால் கவனமாக தயாரிக்கப்பட்டனவாகும். இவ்வுயர்தர, ஏற்றுமதி தரத்திலான தின்பண்டங்களானவை மகிழ்ச்சிகரமான சமையல் அனுபவங்களை உறுதிப்படுத்தும் விதமாக, உள்ளுர் மற்றும் சர்வதேச நிபுணர்களது கூட்டு முயற்சியின் ஊடாக உருவாக்கப்பட்டனவாகும்.
டிரீட்ஸ் ஒவ் சிலோன் தின்பண்ட எல்லைகளிற்கு மேலதிகமாக, கொக்கிஸ், கவும், களு தொதல், எள் ரோல், பெனி கஜு, தேங்காய் டொவ்பி மற்றும் பலாப்பழ நொறுக்குகள் மற்றும் ஏனையன போன்ற பாரம்பரிய இலங்கை தின்பண்டங்களது பன்முகப்பட்ட தேர்வுகளிற்கும் இவ்வணிக வளாகம் வாய்ப்பளிக்கின்றது. லே டிரீட்ஸ் குக்கிஸ், டீ டைம் குக்கிஸ், சொக்கலேட் துண்டங்கள் மற்றும் ஆர்டிசன் சொக்கலேட்ஸ் உள்ளிட்ட லஸ்ஸன இன்னோவேசன்சின் லே டிரீட்ஸ் உற்பத்தி கூறுகளையும் வாடிக்கையாளர்கள் புதிதாக திறக்கப்பட்ட வணிகவளாகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
லஸ்ஸன குழுமத்தின் தலைவர்/ முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி லசந்த மாளவிகே அவர்கள், விமான நிலையத்தில் டிரீட்ஸ் ஒவ் சிலோன் வணிக வளாகத்தின் முக்கியத்துவம் குறித்து கூறுகையில், “டிரீட்ஸ் ஒவ் சிலோன் மற்றும் லே டிரீட்ஸ் எனும் வர்த்தக நாமங்கள் இலங்கையின் உத்தியோகப்பூர்வ சுவைகளை உலகிற்கு கொண்டுசெல்லும் எமது அர்ப்பணிப்பினை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. நூறு சதவீதம் உள்ளுரில் மேற்கொள்ளப்பட்ட எமது வியாபாரம் குறித்தும் அனைத்து உலகளாவிய பின்னணியிலான தனிநபர்களிற்கும் எமது சுவைநயங்களது அபரிதமான சுவையையும் கைவினைத்திறத்தையும் பகிர்ந்துக்கொள்ளும் எமது அர்ப்பணிப்பினையும் முன்னிட்டு நாம் பெருமையடைகின்றோம்.” என்றார்.
லஸ்ஸன இன்னோவேசன்ஸின் செயற்றுறை தலைவர், யுகந்தா சூரியாராச்சி அவர்கள், தங்களது உயர் தரம் மற்றும் தனிச்சிறப்பான சுவை என்பவற்றை சிறப்புறுத்தி, டிரீட்ஸ் ஒவ் சிலோன் மற்றும் லே டிரீட்ஸ் வர்த்தக நாமங்களது தனித்தன்மைகளை விளக்கி உரையாற்றினார். “எமது தின்பண்டங்கள் ஒவ்வொன்றும் நாவில் சுவையூறும் புத்துணர்ச்சி சுவையினையும், சுவையூட்டிகளது ஈர்க்கும் நறுமணங்களையும், மற்றும் இலங்கை சுவையூட்டிகளது பேணப்பட்ட ஆரோக்கிய நலன்களையும் வெளிப்படுத்தி உச்ச சுவையுணர் அனுபவத்தை அளிக்கின்றது” என்றார் சூரியாராச்சி அவர்கள்.
டிரீட்ஸ் ஒவ் சிலோன் தன்னுடைய உலகறிந்த சுவையூட்டிகளிலிருந்து அதிசிறந்த சுவையான உணவுகளை வடிவமைப்பதிலான தேசத்தின் நிபுணத்துவத்தை முன்னிலைப்படுத்தி இலங்கையின் சயைமயற்கலையை சர்வதேச சந்தைக்கு பரிசளிக்கும் எண்ணத்தை மீளாக்கம் செய்வதினை நோக்காகக் கொண்டுள்ளது. பல வருட கடின உழைப்பும் தொழில் வேட்கையும் மிக்க, லஸ்ஸன இன்னோவேசன்ஸானது இக்கனவிற்கு டிரீட்ஸ் ஒவ் சிலோன் எனும் வர்த்தக நாமத்தினால் உயிரூட்டியுள்ளது.
உயர் தர நிர்ணயங்களை உறுதிப்படுத்துவதில், டிரீட்ஸ் ஒவ் சிலோனின் அனைத்து உற்பத்திகளும் உள்ளுர் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட சிறப்பான மூலக்கூறுகளை பயன்படுத்தி அதிநவீன கூடங்களிலேயே உற்பத்திசெய்யப்படுகின்றன. டிரீட்ஸ் ஒவ் சிலோனின் உற்பத்திகளை உண்மையில் அதிசிறப்பானவையாகவும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டவையாகவும் உருவாக்க, கடுமையான சர்வதேச தர நிர்ணயங்களை உற்பத்தி செயன்முறை கைக்கொள்கின்றது. உற்பத்திகள் மத்திய கிழக்கு, ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலிய சந்தைகளிற்கு ஆரம்பத்தில் ஏற்றுமதிச்செய்யபடவிருந்தாலும், உள்ளுர் உபயோகத்திற்காக லஸ்ஸன.கொம், லஸ்ஸன புளொரா சில்லறை வணிக மையங்கள் மற்றும் நாடு முழவதிலுமான முன்னணி சூப்பர்மார்க்கெட் தொடர்களிலும் கிடைக்கப்பெறுகின்றன.
Lassana.com (Pvt) ltd க்குச் சொந்தமான துணை நிறுவனமான Lassana Innovations (Pvt) Ltd, சிறந்த தரமான குக்கீகளின் பிரத்தியேக வர்த்தக நாமமான ட்ரீட்ஸ் ஒப் சிலோன் ஐ அண்மையில் அறிமுகப்படுத்தியது.
இது இலங்கைக்கேயுரிய பாரம்பரிய சுவைகளுடன் தனித்துவமான உணவுப் பிரியர்களால் விரும்பப்படுகிறது.
உலகம் முழுவதும் இலங்கை கறுவாப் பட்டை, கறுப்பு மிளகு, ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய், மற்றும் பிற சுவைகள் அடங்கிய இலங்கையின் சிறந்த மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தி, உள்ளூர் மற்றும் சர்வதேச நிபுணர்களின் குழு இணைந்து இந்த உயர்தர, ஏற்றுமதி தரத்திலான குக்கீகள் தயாரிக்கப்படுகின்றன.
இக் குக்கீகளின் அறிமுகத்தை அடையாளப்படுத்தும் வகையில், Lassana.com (Pvt) Ltd இன் தலைவர்/முகாமைத்துவப் பணிப்பாளர் டாக்டர் லசந்த மாளவிகே, கொமர்ஷல் வங்கி PLC இன் முகாமைத்துவப் பணிப்பாளர் /பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. சனத் மனதுங்கவிடம், ‘ட்ரீட்ஸ் ஒப் சிலோன்’ குக்கீகளின் முதல் தொகுதியை அண்மையில் கையளித்தார்.
இலங்கை வரலாற்று ரீதியாக உலகின் சிறந்த மசாலா மற்றும் பாரம்பரியமான சுவைகளுக்காக அறியப்படுகிறது, ஆனால் இந்த சுவைகளைக் கொண்டு அதிசிறந்த உணவுகளை தயாரிப்பதில் எங்கள் நிபுணத்துவம் பற்றி சர்வதேச சந்தைகளில் மிகக் குறைந்த அறிவே உள்ளது. 100% உள்நாட்டு வணிக நிறுவனமாக இருப்பதால், இலங்கையின் சுவையான உணவுகளை உலகிற்கு எடுத்துச் செல்வது எங்களின் கனவாகும், மேலும் அந்த கனவை நனவாக்க பல வருடங்கள் மேற்கொண்ட கடின உழைப்பு மற்றும் ஆர்வத்தின் விளைவே ட்ரீட்ஸ் ஆஃப் சிலோன் ஆகும்" என்று. Lassana.com (Pvt) Ltd இன் தலைவர்/முகாமைத்துவப் பணிப்பாளர் டொக்டர் லசந்த மாளவிகே கூறுகிறார்.
Lassana Innovations ட்ரீட்ஸ் ஆஃப் சிலோன் வர்த்தக நாமத்தின் கீழ் 3 வகை குக்கீகளை அறிமுகப்படுத்தியுள்ளது, ஒவ்வொன்றும் முறையே இஞ்சி, மசாலா மற்றும் கறுவாப் பட்டை ஆகியவற்றின் முக்கிய பொருட்களை அடிப்படையாகக் கொண்டது. புதிதாக பேக் செய்யப்பட்ட இந்த குக்கீகளின் புத்துணர்ச்சி வாயில் நீர் ஊறவைக்கும். அவற்றின் சுவை, மசாலாப் பொருட்களின் தவிர்க்கமுடியாத நறுமணம் என்பனவற்றுடன் அவை இலங்கை மசாலாப் பொருட்களின் பாதுகாக்கப்பட்ட அனைத்து ஆரோக்கிய நலன்களுடன் வருகின்றன.
அனைத்து தயாரிப்புகளும் அதிநவீன வசதி கொண்ட ஆலையில் உற்பத்தி செய்யப்படுகின்றன, உள்ளூர் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட சிறந்த மூலப்பொருட்களைப் பயன்படுத்தி உற்பத்தி செயல்முறை மிகவும் கடுமையான சர்வதேச தரங்களுக்கு அமைய மேற்கொள்ளப்படுகின்றன. தயாரிப்புகள் முதன்மையாக மத்திய கிழக்கு, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டில் உள்ள அனைத்து முன்னணி சூப்பர் மார்க்கெட் சங்கிலிகளிலும் கிடைக்கும். மேலும் ‘ட்ரீட்ஸ் ஆஃப் சிலோன்’ வகை விரைவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள சில்லறை விற்பனைக் கடைகளிலும் கிடைக்கும்.
Lassana Innovation இன் செயற்பாட்டுத் தலைவர் யுகந்த சூரியராச்சி கூறுகையில், இந்த தனித்துவமான தயாரிப்பின் எல்லைகளை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முயற்சிகள் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். எங்களிடம் ஆர்வமும் தொலைநோக்கு பார்வையும் இருந்தது, ஆனால் சில உண்மையான சர்வதேச தரமான தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கு கடின உழைப்பு மற்றும் முழுமையான ஆராய்ச்சி மிகவும் முக்கியமானது என்பதை நாங்கள் அறிந்தோம். தயாரிப்புகளை உருவாக்குவதற்கான நீண்ட, உழைப்பை வழங்கும் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புவதுடன், இலங்கையின் பெருமையை உலகிற்கு எடுத்துச் செல்ல முடிந்ததற்காக அனைவரையும் வாழ்த்த விரும்புகிறேன்.
பிரேசிலில் இருந்து அனுப்பப்பட்டு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) விமான சரக்கு கிராமத்திற்கு வந்த 125 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் அடங்கிய பார்சலை இலங்கை சுங்கப் பிரிவினர் நேற்று கண்டுபிடித்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னர் விமானம் மூலம் நாட்டிற்கு வந்த சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்றை விமான சரக்கு பிரிவின் சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் தடுத்து வைத்துள்ளதாக சுங்கப் பேச்சாளர் பணிப்பாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
பிரேசிலில் இருந்து உள்ளூர் சரக்குதாரர் ஒருவருக்கு அனுப்பப்பட்ட பார்சலில் சுமார் 2.5 கிலோகிராம் கோகோயின் இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
நேற்று பிற்பகல் பொதியை அகற்றுவதற்காக வந்தவரை அதிகாரிகள் கைது செய்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஒரு கிராம் கொக்கெய்ன் தற்சமயம் ரூ.50,000 மதிப்புடையது மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு ரூ.125 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
இன்று (12) நள்ளிரவு முதல் ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்து அதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தினசரி தொடரூந்து பணிப்புறக்கணிப்பு காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குரிய சூழ்நிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத ஊழியர்கள் மேற்கொண்டுள்ள திடீர் வேலைநிறுத்தப் போராட்டங்களினால் இந்நாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் நான்கு அமைச்சுப் பாடவிதானங்களில் திருத்தப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிடைக்கப்பெறும் அறிக்கையின்படி, சுகாதாரம், விளையாட்டு, போக்குவரத்து மற்றும் தொழில்துறையின் விடயங்கள் நிறைய மாறக்கூடும்.
இதன்படி, விளையாட்டுத்துறை அமைச்சுக்கள், அனுர பிரியதர்ஷன யாப்பா, போக்குவரத்து ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோருக்கு கைத்தொழில் அமைச்சுக்கள் வழங்கப்படவுள்ளதாக அறியமுடிகிறது.
ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பில் இன்னும் இறுதி இணக்கப்பாட்டுக்கு வரவில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு சில விசேட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் ஒரு மணிநேரம் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் ஜனாதிபதி அலுவலகத்தின் தலைவர் சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டுள்ளார்.
தற்போது அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வரும் அமைச்சர்களுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து முக்கிய பதவிகளையும் பகிர்ந்தளிக்கும் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த முன்மொழிவுகள் அடுத்த அரசியல் குழு கூட்டத்தில் ஒப்புதல் பெற திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவிக்கவும் இந்தக் குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தெரண ஊடக வலையமைப்பின் தலைவரும், பிரபல வர்த்தகருமான திலித் ஜயவீர அரசியல் கட்சியொன்றின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் மவ்பிமா ஜனதா கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, கட்சியின் சின்னம் ஆகாய விமானம்.
கட்சியின் மூத்த தலைவர் ஹேமகுமார நாணயக்கார ஆவார்.
நீர் மின் உற்பத்தி 20 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் சிறிதளவு மழை பெய்து நீர் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், மழையின் அளவைப் பொறுத்து நாளுக்கு நாள் நீர்மின் உற்பத்தி சதவீதம் மாறுபடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீர்த்தேக்கங்களின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இதுவரையில் கணிசமான மழை பெய்யவில்லை எனத் தெரிவித்த ரொஹான் செனவிரத்ன, கடந்த வாரம் 14 வீதமாக இருந்த நீர்மின் உற்பத்தியை உயர்த்துவது மிகவும் கவனமாகச் செய்ய வேண்டிய பணியாகும் என்றார்.
எதிர்வரும் நாட்களில் மழை பெய்யாவிட்டால் மீண்டும் உற்பத்தியை குறைக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் புதிய பசும்பால் வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய கால்நடை அபிவிருத்தி சபையினால் நாளை (11) முதல் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
நாளைய தினம் நாரஹேன்பிட்டியில் உள்ள தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் வளாகத்தில் இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.