web log free
December 24, 2025

திருடர்களுடன் எமக்கு ஒப்பந்தம் கிடையாது

சில அரசியல் கட்சித் தலைவர்கள் ஆட்சிக்கு வந்ததும் ஊழல் கொடுக்கல் வாங்கல்களை தடுப்பதாக  கூட்டங்களில் கூறினாலும் சமகி ஜன பலவேகய நாட்டையே திவாலாக்கிய ராஜபக்ஷ குடும்பத்தை நீதிமன்றத்திற்கு அழைத்து தேவையான சட்டத்தை முன்னெடுத்ததாக சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

திருடர்களுடன் சமகி ஜன பலவேகவுக்கு எந்த ஒப்பந்தமும் இல்லை என்பதால், எதிர்க்கட்சியில் இருந்தே திருடர்களைப் பிடிப்பது தொடங்கியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

கோப்பினை காட்டி பொய்யான காட்சிகளை காட்டி மக்களை ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொள்வதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மினுவாங்கொடை மக்கள்  சந்திப்பில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, தேசிய இணைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, கலாநிதி ஹர்ஷத சில்வா, ஹர்ஷன ராஜகருணா, முஜிபுர் ரஹ்மான், விஜித் விஜயமுனி சொய்சா ஆகியோர் கலந்துகொண்டனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd