இன்று(05) நள்ளிரவு முதல் சேவையிலிருந்து விலகுவதற்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று(05) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவு செய்யப்பட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகிர் மாகார் மற்றும் சியம்பலாபிட்டி இடையே நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் ரஞ்சித் சியம்பலாபிட்டிய 148 வாக்குகளை பெற்று பிரதி சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.
பிரதி சபாநாயகர் நியமனம் இன்று (05) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ராஜினாமா செய்ததை அடுத்து பிரதி சபாநாயகர் பதவி வெற்றிடமாகியுள்ளது.
அதன்படி இன்று பிரதி சபாநாயகரை நியமிப்பதற்கு நேற்று (04) நடைபெற்ற கட்சித் தலைமைக் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது.
பிரதி சபாநாயகர் பதவிக்கு பலரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதுடன், ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷவை நியமிக்க அரசாங்க கட்சி குழு கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதி சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினரின் ஒருவரின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் இன்று காலை இடம்பெறும் குழுக் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 11 சுயேட்சை உறுப்பினர்களும் பிரதி சபாநாயகர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயரை முன்மொழியவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மதுபான போத்தல் ஒன்றின் விலை 80 ரூபாவினாலும், பியர் போத்தல் ஒன்றின் (ஒரு கேன்) விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது என மதுபான நிறுவனம் கலால் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.
போக்குவரத்து, மூலப்பொருட்கள் உள்ளிட்ட செலவுகள் அதிகரித்து வருவதால், மதுபானம் மற்றும் பியர் நிறுவனங்கள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளன
நாளையும் நாளை மறுதினமும் பாராளு மன்றத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதைத் தடுக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
தலங்கம பொலிஸ், மிரிஹானவுக்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர், சட்டமா அதிபர் திணைக் களம் பாராளுமன்றத்திற்கு செல்லும் வீதியில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்காக உத்தரவைப் பெற முயற்சித்ததாக சட்டத்தரணி கமல் விஜேசேகர தெரிவித்தார்.
பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கை சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்புக்கு முரணானது என பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்றத்துக்குள் பிரவேசிப்பதற்கான சிறப்புரிமையை மீறுவதாக பொலிஸார் தெரிவித்ததாகவும், இது நிகழ்வுகளுக்கு தவறான வியாக்கியானம் எனவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகே எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த இளைஞர், யுவதிகள் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 10 ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதனால் பாராளுமன்ற வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் எரிபொருள் விலையில் எவ்வித திருத்தமும் இடம்பெறாது என எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சரான காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் இரண்டு வாரங்கள் வரை விலை திருத்தம் குறித்து விவாதிக்க எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் லங்கா IOC (LIOC) ஆகியவற்றின் எரிபொருட்களின் விலைகளை இணையான விலைக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.எனவே, இது தொடர்பான பிரேரணை அமைச்சரவையில் கையளிக்கப்படும் என்றார்.
ஒரு வெளிப்படையான எரிபொருள் விலை திருத்தம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது மக்களின் தோள்களில் சுமையை விட்டுவிடாமல் டொலர் சந்தைக்கு ஏற்ப CPC மற்றும் LIOC இரண்டின் விலைகளையும் பாதிக்கும் என்றார்.
சமூக ஊடகங்களில் பரவும் பொய்யான தகவல்களை நம்பி மக்கள் தவறாக நடக்க வேண்டாம் எனவும், அமைச்சின் உத்தியோகபூர்வ அறிக்கைகளுக்கு இணங்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ராஜபக்ஷ குடும்பம் பதவி விலக வேண்டும் என்று இலங்கையில் நடந்த கருத்து கணிப்பில் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
நாட்டின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதன் பாதிப்புகள் தொடர்பில் ‘மாற்று கொள்கைக்கான மையம்’ என்ற அமைப்பு இலங்கை முழுவதும் கருத்து கணிப்பு நடத்தியது.
88 சதவீதம் பேர் தாங்களோ அல்லது தங்கள் குடும்பத்தில் ஒருவரோ சமையல் எரிவாயு, எரிபொருள், பால்மா, உரம் போன்ற அத்தியாவசிய பொருட்களை பெற நீண்ட வரிசையில் நின்று கஷ்டப்பட்டதாக கருத்து தெரிவித்தனர்.
10-ல் 9 பேர் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்றும், ராஜபக்சே குடும்பம், இலங்கை அரசியலில் இருந்து விலக வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர்.
87 சதவீதம் பேர் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இப்படி கருத்து தெரிவித்தவர்களில் 3 ஆண்டுகளுக்கு முன்பு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஓட்டுப்போட்ட பெரும்பான்மை சிங்களர்களும் அடங்குவர்.
எனவே, பொருளாதார சிக்கல்களில் இருந்து தங்களை மீட்க ராஜபக்ஷ குடும்பத்தால் முடியாது என்று அனைத்து இனத்தினரும் கருதுவது தெரிய வந்துள்ளது.
58 சதவீதம் பேர் நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டு வருவதற்கு நீண்ட காலம் ஆகும் என்றும், 14 சதவீதம் பேர் சிறிது காலம் ஆகும் என்றும், 2 சதவீதம் பேர் மட்டும், விரைவிலேயே பொருளாதாரம் மீண்டெழும் என்றும் கருத்து தெரிவித்தனர்.
பொருளாதாரம் எப்போது மீண்டு வரும் என்று தெரியாது என்று 26 சதவீதம் பேர் கூறினர். 96 சதவீதம் பேர் எல்லா கட்சி அரசியல்வாதிகளின் சொத்துகளை ஆய்வு செய்து, கணக்கில் காட்டாத சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.