web log free
August 22, 2025

நாம் விலக மாட்டோம், ரணிலை விரட்டுவோம்

காலி முகத்திடல் போராட்டப் பிரதேசத்தில் தற்போது இயங்கி வரும் முன்னிலை சோசலிசக் கட்சியுடன் இணைந்த எந்தவொரு மாணவர் அமைப்பும் அல்லது சமூக இயக்கமும் அதிலிருந்து விலகப் போவதில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமகுமார் குணரட்ணம் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க ஒரு கோழை என்றும் அவர் எதிர்காலத்தில் ஜனாதிபதி பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இணைய ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd