web log free
April 19, 2024

விபச்சாரத்தில் ஈடுபட்ட 7 ஆண்கள் கைது

 

பெண்கள் போல வேடமிட்டு, விபச்சாரத்தில் ஈடுபட்டனர் என்றக்குற்றச்சாட்டில் பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆண்கள் ஏழுபேரும் ரஷ்ய நாட்டு பெண்ணொருவரும் கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கிடைத்த தகவல்கள் அடுத்தே, குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் புலனாய்வு அதிகாரிகளினால் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் இணையத்தளங்களின் ஊடாக, பெண்களின் புகைப்படங்கள் மற்றும் அதற்குரிய கட்டணங்களை அறிவித்து, இவ்வாறு விபச்சாரத்தில் ஈடுபட்டனர் என விசாரணைகளிலிருந்து அறியமுடிகின்றது.

வெளிநாட்டு ஆண்கள் இவ்வாறு பெண்கள் போல வேடமிட்டு, கைதுசெய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இலங்கையில் இதுவாகும் என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுற்றுலாத்துறையினருக்கு வழங்கப்படும் ஒருமாத இலவச விசாவில் இலங்கைக்கு வருகைதரும் இவர்கள், இவ்வாறு விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து அறியமுடிந்துள்ளது.

ஒருதடவை விபச்சாரத்தில் ஈடுபடுவதற்கு, இலங்கை ரூபாவின் பிரகாரம் 25 ஆயிரம் ரூபாவை இவர்கள் அறவிடுகின்றனர் என அறியமுடிகின்றது. கைதுசெய்யப்பட்டவர்கள் மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

குடிவரவு, குடியகல்வு சட்டத்தை மீறி, விபச்சாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கோ அல்லது தண்டம் விதிப்பதற்கோ இன்றேல், நாட்டிலிருந்து வெ ளியேற்றும் நடவடிக்கையை முன்னெடுப்பதோ, குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் செயற்பாடாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Last modified on Wednesday, 28 August 2019 02:53