web log free
March 28, 2024

3 வருடம் ஒரே படுக்கையில்: இன்னும் கன்னிப்பெண்

 

ஒரே வீட்டில், ஒரே படுக்கையில், மூன்று வருடங்களாக ஒருவருடன் வாழ்க்கை நடத்திவருகின்ற நிலையில், தான் இன்னும் கன்னிக் கழியாத சுத்தமான பெண்ணாகவே இருப்பதாக, 20 வயதான பெண்ணொருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டை விசாரித்த பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞனை அழைத்து விசாரித்த போது, அவ்விளைஞனின் பதில் தலையே சுத்துமளவுக்கு இருந்துள்ளது.

இந்த சம்பவம், அனுராதபுரம் தம்புத்தேகம பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. யுவதிக்கு 20 வயது, கொஞ்சம் எடுப்பான தோற்றத்துடன் இருக்கும் அந்த யுவதி, கல்குளமேயை வதிவிடமாகக் கொண்டவள்.

தம்புத்தேகம நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் தொழில்புரிந்து வருகின்றார்.

அந்த யுவதியுடன் காதல் வயப்பட்ட 25 வயதான இளைஞன், அதே வீதியில் சேவையிலீடுபடும் பஸ்ஸின் நடத்துனராக பணியாற்றியுள்ளார்.

காலப்போக்கில் இவ்விருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. அது யுவதியின் வீடுவரைக்கும் சென்றது. வீடாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் பச்சைக்கொடியை காட்டிவிட்டனர்.

யுவதியின் வீட்டுக்கு வருவதும் போவதுமாக இருந்த இளைஞனுக்கு பெற்றோர் எதிர்ப்பை காண்பிக்கவில்லை. காலங்கள் உருண்டோ, இருவரும் தனிக்குடித்தனம் சென்றுவிட்டனர். இவ்வாறிருக்கையில், தம்புத்தேகம நகரில் ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரிடம், அவ்வீதியில் தேம்பி தேம்பி அழுத்துக்கொண்டு வந்த அந்த யுவதி, முறைப்பாடொன்றை செய்துள்ளார்.

முறைப்பாடு விசித்திரமாக இருந்தமையால், அதனை பொலிஸ் நிலையத்துக்கு அப்பொலிஸார் பாரப்படுத்தினர். இளைஞனோ, முதலாவது மனைவியை பிரிந்து வாழ்ந்துவருகின்றார்.

விசாரணை, பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டது. யுவதியை மட்டுமல்ல, இளைஞனையும் அழைத்த பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்தனர்.

கடந்த 3 வருடங்களாக இந்த இளைஞனுடன் தான் வாழ்ந்தாலும், கன்னிக்கழியாத சுத்தமான பெண்ணாகவே இருக்கின்றேன். அந்த மூன்று வருடங்களில் ஒருநாள் கூட, கணவன் மனைவியாக தாங்கள் இருவருமே வாழவே இல்லை.

ஒவ்வொரு இரவும் பௌர்ணமியாகவே கழிகிறது என அழுதுவிட்டாள். ஆனால், தனக்கு வேறு ஆண்களுடன் தொடர்பு இருப்பதாக ஒவ்வொருநாளும் சந்தேகப்படும் இளைஞன், தன்னுடன் ஒவ்வொரு நாளும் சண்டையிடுவதாக முறையிட்டுள்ளார்.

தலையை குணிந்தவாறு முறைப்பாட்டை கேட்டுக்கொண்டிருந்த அந்த இளைஞன், மெதுவாக வாயைத் திறந்தார்.

இல்ல சேர், நோனா, நான் திருமணம் முடித்தவன், முதலாவது மனைவியிடமிருந்து பிரிந்து வாழக்கின்றேன். ஆனால், சட்டரீதியாக இன்னும் பிரியவில்லை. அதுவரையிலும் இவளை தொடமாட்டேன். இவள் மீது அளவு கடந்த பாசம், லவ், காதல், என புலம்பிக்கொண்டே போனார்.

அளவுக்கடந்த அன்பினால், சாதாரண சந்தேகம் வந்துவிட்டது என சாதாரணமாகவே கூறிவிட்டார். தலையை பிய்த்துக்கொண்ட பொலிஸார், யுவதியின் பெற்றோரை அழைத்து. கடுமையாக எச்சரித்து யுவதியை அவர்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

ஆனால், பெற்றோருடன் போக மறுத்த அந்த யுவதி, இளைஞனின் கையை இறுக்கப்பிடித்தவாறு, பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறினாள்.

பெற்றோரையும், முறைப்பாட்டு புத்தகத்தையும் திருப்பி திருப்பி பார்த்த பொலிஸார், திக்குமுக்காடி திகைத்துநின்றனர்.

Last modified on Thursday, 29 August 2019 02:32