புத்தளம் மாவட்டம் சிறாம்பையடி பகுதியில் வீட்டு முற்றத்தில் மலைப்பாம்பொன்றை அவதானித்த வீட்டின் உரிமையாளர் ஒருவர் புத்தளம் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்குத் தகவலை வழங்கியுள்ளார்.
இதனையடுத்து அப்பகுதிக்கு வருகை தந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சென்று குறித்த மலைப்பாம்பை மிகவும் சிரமத்திற்கு மத்தியில் நேற்று (15) உயிருடன் பிடித்து கல்வில சரணாலயத்தில் விடுவிக்கப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
குறித்த மலைப்பாம்பு சுமார் 8 அடி நீளம் கொண்டதாக காணப்படுவதாக வனஜீவராசிகள திணைக்களத்தினர் மேலும் தெரிவித்தனர்