web log free
April 26, 2024

திருமதி அழகி களத்தில் அசிங்கப்பட்ட புஷ்பிகா அடுத்து அரசியல் களத்தில்..!

எதிர்கால அரசியல் பயணம் குறித்து பேசப்படுவதாக இலங்கையின் முன்னாள் அழகுராணி புஷ்பிகா டி சில்வா தெரிவித்துள்ளார்.

அவர் உலக திருமதி அழகி போட்டியில் ஆறாவது இடத்தைப் பிடித்தார். முகநூலில் பதிவு ஒன்றை இட்டுள்ள அவர்,

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் திருமதி அழகி போட்டி ஏற்பட்டாளர்கள், நடுவர்கள் உட்பட இலங்கை திருமதி அழகி போட்டியில் நீதிக்காக நின்ற அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார்.

மேலும், தான் யாரையும் வெறுக்கவில்லை என்றும், தன்னை வெறுப்பவர்களை உடனடியாக மன்னிப்பதாகவும், வெறுப்பால் எதையும் வெல்ல முடியாது என்றும் கூறினார்.

இம்மாதம் 8ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் புஷ்பிகாவிடம் இருந்து இலங்கை திருமதி அழகி பெயரை நீக்க திருமதி அழகி ஏற்பாட்டுக் குழுவின் பணிப்பாளர் சந்திமால் ஜயசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த நடவடிக்கை தனது அமைப்புக்கு உள்ள சட்ட அதிகாரங்களுக்கு உட்பட்டது என்றும், "Sri Lankan Wedding Beauty" என்ற பெயரைப் பயன்படுத்த முடியாது என்றும் கூறினார்.