web log free
December 07, 2025

டீசல் கேட்டு ஹட்டனில் சுற்றுலா பயணிகள் சண்டை!

திஸ்ஸமகாராம பகுதியில் இருந்து கண்டி வழியாக மஸ்கெலியாவிற்கு சுற்றுலா சென்ற பயணிகள் இன்று தாம் பயணித்த வாகனத்திற்கு டீசல் இன்றி பெரும் சிரமத்தை எதிர்நோக்கினர்.

கண்டியில் இருந்து மஸ்கெலியா செல்லும் வழியில் ஹட்டன் எரிபொருள் நிலையத்தில் 20 லீட்டர் டீசலேனும் தருமாறும் அது தங்களுக்கு வீடு செல்ல உதவும் என்றும் கேட்டுள்ளனர்.

எனினும் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் டீசல் கையிருப்பில் இருப்பதால் வழங்க முடியாது என எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் கூறியுள்ளார்.

இதனால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

உடனே தலையிட்ட ஹட்டன் பொலிஸார் அமைதி ஏற்படுத்த முயன்றதுடன் தனியார் பஸ் சாரதி ஒருவர் 20 லீட்டர் டீசல் வழங்கியதை அடுத்து சுற்றுலா பயணிகள் அங்கிருந்து சென்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd