web log free
April 26, 2024

இந்தோனேசிய ஆர்ப்பாட்டத்தில் 6 பேர் மரணம்

இந்தோனேசியத் தலைநகர் ஜக்கர்த்தாவில் நடந்த மோதலில் 6 பேர் உயிரிழந்ததுடன் 200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதி வேட்பாளர் பிரபோவோ சுபியாந்தோவின் ஆதரவாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே நேற்றிரவு மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கலவரத்தின்போது 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 200 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, அதிகாரபூர்வ தேர்தல் முடிவை ஜனாதிபதிதேர்தல் வேட்பாளர் பிரபாவோ சுபியாந்தோ நிராகரித்துள்ளார்.