web log free
April 19, 2024

டிரம்ப்-கிம் பெப்ரவரியில் சந்திப்பு

 

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்திக்க போவதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது.


பெப்ரவரி மாத இறுதிக்குள் இந்த சந்திப்பு இடம்பெறும் என்று அறியமுடிகின்றது. அவ்வாறு இடம்பெற்றால். அது இருவருக்கும் இடையில் நடைபெறும் 2 ஆவது உச்சி மாநாடாகும்.


வட கொரிய அரசின் பிரதிநிதி கிம் ஜாங்-சோல் அதிபர் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்த பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது.


வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னிடம் இருந்து கொண்டு வந்த கடிதத்தை கிம் ஜாங்-சோல் டிரம்பிடம் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.


கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாட்டுக்கு பின்னர், அணு ஆயுத ஒழிப்பில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.


புதிய உச்சி மாநாடு நடைபெறும் இடம் அறிவிக்கப்படவில்லை. எனினும், 2 ஆவது மாநாடு, வியட்நாமில் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.