web log free
June 02, 2025

வன்புணர்ந்த பெண்ணுக்கு கொரோனா- பதற்றத்தில் குற்றவாளி

பாலியல் பலாத்காரத்திற்குள்ளான பெண்ணுக்கு கொரோனா உறுதியான நிலையில் அவரை பலாத்காரம் செய்து  சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் இதுவரை வரவில்லை.

டெல்லியில் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ய வழக்கில் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு திகார் சிறை 2 -ல் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா இருப்பது உறுதியானது.


டெல்லியில் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ய வழக்கில் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு திகார் சிறை 2 -ல் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

இதையடுத்து தகவலறிந்த சிறைத் துறை நிர்வாகம் அந்த பெண்ணை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக சிறையில் இருக்கும் கைதிக்கு கொரோனா சோதனை எடுத்தது. அது போல் அவருடன் ஒரே செல்லில் தங்கியிருந்த இன்னொரு கைதிக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. இதுகுறித்து சிறை துறை நிர்வாகம் கூறுகையில் சிறையில் சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு வருகிறது.அது போல் புதிதாக சிறைக்கு கைதிகளாக வருவோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

Last modified on Thursday, 14 May 2020 01:43
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd