web log free
March 28, 2024

8பேர் கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

இலங்கையர் உள்ளிட்ட 8 பேரை கொலை செய்யத ப்ருஸ் மெக் ஆத்தர் என்ற நபருக்கு கனடா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

2010ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அவர் இந்த கொலைகளை செய்துள்ளார்.

ஸ்கந்தராஜா நவரட்ணம் மற்றும் கிரிஷ்ண குமார் கணகரட்ணம் ஆகிய இலங்கையர்கள் உள்ளிட்ட எட்டு பேரை கொலை செய்ததாக 67 வயதான மெக் ஆர்த்தர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

அவர் மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், 25 ஆண்டுகளாக பிணைக்கு விண்ணப்பிக்க முடியாத சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.