web log free
May 08, 2024

அல்கொய்தாவின் வடக்கு ஆபிரிக்க தலைவர் படுகொலை

மாலியில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையில் அல்கொய்தா அமைப்பின் வடக்கு ஆபிரிக்க தலைவர் அப்டெல்மலெக் டுரொக்டெல் கொல்லப்பட்டுள்ளார்.

தமது இராணுவ நடவடிக்கையின் போது டுரொக்டெல் கொல்லப்பட்டார் என்று பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ப்ளோரென்ஸ் பர்லி தெரிவித்தார்.

அவருக்கு மிக நெருக்கமான உறுப்பினர்களும் அவருடன் இந்த இராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டுள்ளார். மாலியின் வடக்கு பகுதியில், கடந்த புதன்கிழமை இந்த இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இஸ்லாமய அரசு பயங்கரவாத அமைப்பின் சிரேஷ்ட கட்டளைத் தளபதி ஒருவர், கடந்த மாதம் மாலியில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Last modified on Sunday, 07 June 2020 03:42