web log free
April 26, 2024

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது வழக்கு விசாரணை

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் இந்த வாரம் வழக்கு விசாரணையை எதிர்நோக்குகிறார்.

அரசாங்க நிதியான 1MDB தொடர்பான ஊழலில் நஜிப் பில்லியன் கணக்கான டொலரைத் திருடியதாகக் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

அவருடைய கூட்டணிக் கட்சி ஆட்சியை இழப்பதற்கு 1MDB விவகாரம் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது.

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீதான வழக்கு விசாரணை வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கும்.

பண மோசடி செய்ததாகவும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் நஜிப் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை நஜிப் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.