web log free
July 02, 2025

கொரியத் தீபகற்பத்தில் தொடர்ந்தும் அமெரிக்கத் துருப்புகள்

கொரியத் தீபகற்பத்தில் குறுகிய காலத்திற்கு அமெரிக்கத் துருப்புகள், தொடர்ந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்பில் தென்கொரிய அதிகாரிகள் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர். அந்த ஒப்பந்தம் அடுத்த வருடம் காலாவதியாகும்.

அதிகப் பணம் வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கோரிக்கை விடுத்ததை அடுத்து பழைய ஒப்பந்தம் காலாவதியாகியிருக்கிறது.

தற்போதைய புதிய ஒப்பந்தத்திற்குத் தென்கொரிய நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கவேண்டும்.

தென்கொரியாவில் அமெரிக்கத் துருப்புகள் இயங்குவதற்குப் புதிய ஏற்பாட்டின்படி, தென்கொரியா 924 மில்லியன்டொலர் வழங்கவேண்டும்.

முன்பு அந்தத் தொகை 850 மில்லியன் டொலராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd