web log free
May 03, 2024

சீனா இராணுவம் பயன்படுத்திய ஆயுதங்கள் கசிந்தன

இந்திய வீரர்களை தாக்குவதற்கு சீன இராணுவம் பயன்படுத்திய ஆயுதங்கள் குறித்த புகைப்படங்கள் கசிந்துள்ளது.

இந்தியா-சீனாவிற்கிடையே, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக எல்லையில் மோதல் நிலவி வருகிறது.

கடந்த மே 5-ஆம் திகதி லடாக்கிலும், சிக்கிமிலும் சீனா அத்துமீறியது. இதன் காரணமாக சீனாவிற்கு பதிலடி கொடுக்க, இந்தியா தயாராகி வந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் லடாக்கில் இரண்டு நாட்கள் முன் நடந்த சண்டையில் 20 இந்திய இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இந்த சண்டை லடாக்கில் இருக்கும் கல்வான் பகுதியில் நடந்தது. மொத்தம் 8 மணி நேரம் நடந்த இந்த சண்டையில், இரண்டு நாடுகளும் துப்பாக்கிகள், குண்டுகள் எதையும் பயன்படுத்தவில்லை.

முழுக்க முழுக்க கம்பிகள், குச்சிகள், இரும்பு ராடுகள், கற்களை வைத்து தாக்கியுள்ளனர். இதில்தான் இந்திய வீரர்கள் 20 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த தாக்குதலை நிகழ்த்துவதற்காக சீன இராணுவம் முழுக்க முழுக்க தயாராகி வந்து இருக்கிறது இதில் இருந்தே தெரிகிறது. அதாவது சீன இராணுவம் முன்பே திட்டமிட்டு தயாராகி லடாக் பகுதிக்கு வந்து இருக்கிறது.

இதற்காக வித்தியாசமான ஆயுதங்களை சீனா உருவாக்கி உள்ளது. அதாவது அந்த எல்லைக்கு வந்த 300 சீன வீரர்கள் எல்லோரும் வித்தியாசமான ஆயுதங்களோடு அங்கு வந்துள்ளனர்.

அது தொடர்பான புகைப்படங்கள் தான் தற்போது வெளியாகியுள்ளது.

அதில், கட்டிடம் கட்டும் இரும்பு கம்பியில் முற்களை வைத்து வெல்டிங் செய்து இருக்கிறார்கள். கூரான முற்கள் போல இந்த ஆயுதங்களை உருவாக்கி உள்ளனர்.

அதேபோல் கஜா ஆயுதம் போலவும் நிறை
இதனால் சீன இராணுவம் திட்டமிட்டு இந்த ஆயுதங்களை கொண்டு வந்து இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.ய ஆயுதங்களை உருவாக்கி கொண்டு வந்துள்ளனர். இதை வைத்துதான் இந்திய வீரர்களை சீனர்கள் தாக்கி உள்ளனர்.

இதனால் தான் இந்திய தரப்பில் மரணங்கள் ஏற்பட்டுள்ளது. அமைதி பேச்சுவார்த்தைக்கு வரும் ஒரு நாடு இந்த ஆயுதங்களை கொண்டு வர வாய்ப்பு இல்லை.

Last modified on Friday, 19 June 2020 01:27