web log free
December 16, 2025

கோமா நிலையில் வடகொரிய ஜனாதிபதி

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தற்போது கோமாவில் உள்ளார் என்று தென்கொரிய உளவு நிறுவனங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன.

கிம் குடும்பத்தில் அவரது நம்பிக்கைக்கு பாத்திரமானவர் அவரது தங்கை ரி சோ இல், அடுத்த ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய வடகொரிய ஜனாதிபதியாகிய கிம்முக்கு மூன்று மகன்கள் உள்ளனர் எனக் கூறப்படுகிறது.

இவர்களுக்கு ஜனாதிபதியாக பதவி ஏற்கும் வயது இல்லாததால் கிம்மின் தங்கை அதிபராகப் பதவியேற்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வெளிவிவகார அமைச்சு உட்பட பல முக்கியத் துறைகள் தங்கை ரீக்கு அளிக்கப்பட்டு விட்டது என தென் கொரிய உளவு நிறுவனம் தகவல் அளித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd