web log free
April 16, 2024

அப்கானிஸ்தானில் கார் குண்டு வெடிப்பில் பள்ளி மாணவர்கள் உள்பட 30 பேர் பலி

அப்கானிஸ்தானில் அரசு விருந்தினர் இல்லம் அருகே நடத்தப்பட்ட கார் குண்டு வெடிப்பில், பள்ளி மாணவர்கள் உள்பட 30 பேர் பலியாகினர்.

அப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும், தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் தேடி பல நாடுகளுக்கு அகதிகளாக சென்று உள்ளனர்.

இந்நிலையில், லோகர் மாகாணத்தின் தலைநகர் புல்-இ-ஆலமில் உள்ள மருத்துவமனை ஒன்றில், ரமலான் மாதத்தினை ஒட்டி இஸ்லாமிய மக்கள் நோன்பு துறந்தனர். அப்போது, மருத்துவமனைக்கு வெளியே திடீரென கார்மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் சிக்கி, பள்ளி மாணவர்கள் உள்பட 30 பேர் பலியாகினர். காயமடைந்த 70 பேர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்‍கு அனுமதிக்‍கப்பட்டனர். அவர்களில் பலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை உயர கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.