web log free
March 29, 2024

காதலனை சமையலறையில் கொடூரமாக கொன்ற காதலி

இந்தியாவில் பெண் தனது காதலரை கொலை செய்து சமையலறையில் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரசேதம் மாநிலம் காசியாபாத்தில் வசிக்கும் 19 வயதான முர்சலீன்க்கு அதே பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர் அந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இந்நிலையில் அவரை கடந்த 11ஆம் திகதி முதல் காணவில்லை.

அவரது பெற்றோர்கள் எங்கே தேடியும் முர்சலீனின் கிடைக்காததால் வேறு வழியின்றி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து பொலிஸ் தீவிரமாக தேடி வந்த நிலையில் அவரது சிம் கார்டின் சிக்னல் அந்த பெண்ணின் வீட்டை காட்டியுள்ளது.
இதனால் அந்த பெண்ணின் வீட்டில் பொலிஸார் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது சமையறையில் புதிதாக டைல்ஸ் ஒட்டியிருந்ததை கவனித்த அதிகாரிகள் குறிப்பிட்ட இடத்தை உடனடியாக தோன்றும்படி உத்தரவிட்டனர்.

அப்போது அங்கு புதைக்கப்பட்டிருந்த வாலிபரின் சடலத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து அப்பெண்ணை சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸhர்
கைது செய்துள்ளனர்.

 

Last modified on Friday, 20 August 2021 09:01