web log free
April 25, 2024

திடீரென விமானத்தில் உயிழந்த நபரினால் பரபரப்பு

இரண்டு டோஸ்களை செலுத்திக்கொண்ட நபர் விமானத்தில் பயணித்தபோது நடுவானில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், 

துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் இருந்து பிஹசூஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் கடந்த 25ஆம் திகதி ஜெர்மனி நாட்டின் ஹம்பர்க் நகருக்கு புறப்பட்டது.

ஹம்பர்க் புறப்பட்ட அந்த விமானத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். அந்த விமானத்தில் 51 வயதுடைய நபர் பயணம் செய்துள்ளார்.

கொரோனா பரவல் குறைந்ததையடுத்து ஜெர்மனிக்கு துருக்கியில் இருந்து விமானம் மூலம் வரும் பயணிகள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், பயணிகள் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று ஜெர்மனி வழிகாட்டு நெறிமுறை வெளியிட்டிருந்தது.

விமானம் ஹம்பர்க் விமான நிலையம் வந்தடைந்தபோது அந்த 51 வயது முதியவர் தனது இருக்கையில் உறங்கியவாறு இருந்துள்ளார். அவரை விமான ஊழியர்கள் எழுப்பியுள்ளனர். ஆனால், அந்த நபர் கண் விழிக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த விமான ஊழியர்கள் விமானத்தில் பணியில் இருந்த மருத்துவ ஊழியருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த நபரை மருத்துவ ஊழியர் பரிசோதனை செய்துள்ளார். குறித்த பயணி உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த சக பயணிகள் அலறியடித்து விமானத்தில் இருந்து இறங்கி ஓடினர்.

இதனை தொடர்ந்து உயிரிழந்த பயணியின் உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் உயிரிழந்த பயணிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.