web log free
April 16, 2024

ஜப்பான் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு

புதிய வகை கோவிட் வைரசான ஒமிக்ரோன் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில், அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் நாளை (30) முதல் உலகெங்கிலும் உள்ள அனைத்து வெளிநாட்டுப் பயணிகளினதும் நுழைவை ஜப்பான் இடைநிறுத்தியுள்ளதாக ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா(Fumio Kishida) அறிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா மற்றும் அதன் 8 அண்டை நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளும், 10 நாட்கள் தனிமைப்படுத்துதல் விதிகளையும் ஜப்பான் முதலில் அறிவித்திருந்தது.

ஆனால், இந்த புதிய வைரஸ் பல நாடுகளில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தற்போது இந்த புதிய கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.