web log free
April 25, 2025

இலங்கையில் கொண்டம் இலவச விற்பனையில்

எச்.ஐ.வி தொற்றாளர்களின் துரித அதிகரிப்பு காரணமாக பொலன்னறுவை மாவட்டத்தின் பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள பாமசிகள் மூலம் மாதாந்தம் ஐம்பதாயிரம் ஆணுறைகளை (கொண்டம்) இலவசமாக வழங்க பொலன்னறுவை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த வருடம் ஜனவரி முதல் நவம்பர் இறுதி நாள் வரை பொலன்னறுவை மாவட்டத்தில் 16 எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்கள் (எயிட்ஸ் நோயாளிகள்) கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 05 பேர் இளம் வயதினர் எனவும் பொலன்னறுவை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டபிள்யூ.கே. சரத்சந்திர குமாரவன்ச கூறுகிறார்.

பொலன்னறுவை மாவட்டத்தில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 82 எனவும் அவர்களில் பெரும்பாலானோர் ஒரே பாலின உறவுகளினால் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக பொலன்னறுவை மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் இந்த நிலையங்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் கொண்டம் வழங்குவதன் மூலம் இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd