web log free
May 06, 2024

பிரதமர் பதவியில் கோட்டாவை அமர்த்த மொட்டுவில் ஒரு குழு பிரயத்தனம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் தற்போது இரகசிய கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பது குறித்த கலந்துரையாடலின் நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர் ஒருவர் தனது பதவியை இராஜினாமா செய்து, அந்த வெற்றிடத்திற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பின்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் பிரேரணையின் மூலம் கோட்டாபய ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்படவுள்ளார்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மற்றுமொரு உறுப்பினர்கள் இதற்கு எதிராக இருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.