web log free
May 03, 2024

T-56 துப்பாக்கி தோட்டாக்களுடன் பாடசாலை மாணவன் கைது

கரந்தெனிய பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் பன்னிரண்டாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் பதினைந்து தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த தோட்டாக்கள் T-56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படுவதாக கரந்தெனிய பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

வீடொன்றின் அறையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகளை கைது செய்யச் சென்ற போது பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக அவரது தந்தையும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்கிடமான மாணவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்பதும், இந்த தோட்டாக்கள் அவர்களுக்குச் சொந்தமான கறுவா நிலத்தில் இருந்து வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது என்பதும் இதுவரை தெரியவந்துள்ளதாக பொலீசார் கூறுகின்றனர்.