web log free
September 08, 2024

தபால் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில்

தபால் திணைக்களத்தின் ஊழியர்கள் இன்று நள்ளிரவுடன் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்படபோவதாக தெரிவித்துள்ளனர்.

புதிய நியமனங்கள் மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்ட 14 கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் கூட்டுத்தொழிற்சங்க முன்னணியின் ஏற்பாட்டாளர் எச்.கே.காரியவசம் தெரிவித்தார்.