web log free
May 03, 2024

தினேஷ் சாப்டரின் கொலையை அடுத்து பிரையன் தோமஸ் வெளிநாடு செல்லத் தடை

பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தாமஸ் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டரின் கொலைச் சம்பவம் தொடர்பில் இரகசிய பொலிஸார் நீதிமன்றில் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் இது அமைந்துள்ளது.

பிரையன் தாமஸின் கைத்தொலைபேசியை பொலிசார் கைப்பற்றியுள்ளதுடன் அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் நேற்று பகல் முழுவதும் அவர் வீட்டில் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.